வியாழன், 28 ஜனவரி, 2010

நமது பள்ளியின் இணையதள முகவரி


நமது பள்ளியின் இணையதளத்தை இந்த முகவரியில் சென்றால் காணலாம்
http://srikgsboysschool.com/index.html

புதன், 27 ஜனவரி, 2010

புதைக்கப்பட்ட வரலாற்றை தோண்டுவோம்

நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள்

1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:

1. பள்ளப்பட்டி, மனிமொழி மவ்லானா

2. இராஜகிரி, அப்துல்லா

3. இளையான்குடி, கரீம் கனி

4. திருப்பத்தூர், அபூபக்கர்

5. திருப்பத்தூர், தாஜிதீன்

9. அத்தியூத்து, அபூபக்கர்

10. பக்கரி பாளையம், அனுமன் கான்

11. சென்னை. அமீர் ஹம்சா

12. சென்னை, ஹமீது

13. செங்குன்றம், கனி

14. வண்ணாரப்பேட்டை, ஹயாத்கான்

15. புதுவலசை, இபுராஹிம்

16. பார்த்திபனூர், இபுராஹிம்

17. வனரங்குடி இபுராஹிம்

18. இளையான்குடி அப்துல் கபூர்

19. மேலூர் அப்துல் ஹமீது

20. சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்

21. தத்தனனூர் அப்துல் காதர்

22. பட்டுக்கோட்டை அப்துல் காதர்

23. திருப்பூர் அப்துர் ரஜாக்

24. காவிரிப்பட்டினம் அப்துல் மஜித்

25. குருவம் பள்ளி அப்துல் மஜீத்

26. கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு

27. லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்

28. ராம்நாடு அப்துல் வஹாப்

29. மானாமதுரை அப்துல் பாசித்

30. திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்

31. அத்தியூத்து இபுராஹிம்

32. சென்னை ஜாபர் ஹக்கிமி

33. சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்

34. திருப்பத்தூர் காதர் பாட்ஷா

35. புதுவலசை முஹம்மது லால் கான்

35. பார்த்திபனூர் கச்சி மைதீன்

36. தஞ்சை முஹம்மது தாவூது

37. அறந்தாங்கி முஹம்மதுசெரிபு

38. திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்

39. வடபழனி சென்னை முஹம்மது யூசுப்

40. தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி

41. சிவகங்கை முஹம்மது இபுராஹிம்

42. சென்னை முஹம்மது உமர்

43. மதுரை மொய்தீன் பிச்சை

44. அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா

45. திருப்பத்தூர் பீர் முஹம்மது

46. கும்பகோணம் ரஹ்மத்துல்லா

47. குடியத்தம் நஜீமுல்லாஹ்

48. கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு

49. இராமநாதபுரம் சையது கனி

50. பரகப்பேட்டை தாஜிதீன்

51. மன்னர்குடி சிக்கந்தர்

52. கம்பம் சிக்கந்தர்

53. முதுகுளத்தூர் சுல்தான்

54. கும்பகோணம் சுல்தான்

55. இராமநாதபுரம் தாஜிதீன்

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)

2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)

3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)

4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)

5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)

6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)

7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)

8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)

9. அப்துல் ஹமீது

10. மௌலானா அப்துல் காதர்

நன்றி : நெல்லை சித்தா, கர்தார்.

குடியரசு தினத்தையொட்டி ஸ்ரீவைகுண்டம் சிறையில் 3 கைதிகள் விடுதலை

ஸ்ரீவைகுண்டம் மாவட்ட துணைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் குடியரசு தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் மாவட்ட துணை சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்ற தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆவடி தியாகராஜமூர்த்தி தலைமை வகித்தார். கூடுதல் நீதிபதி மேரி அன்சலாம், துணை நீதிபதி பரமராஜ், குற்றவியல் நீதிபதி செல்வம், வழக்கறிஞர் சங்கத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், குற்றவழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வின் (27),மயில்ராஜ் (27), புருஷோத்தமன் (23) உள்ளிட்ட 3 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக மாவட்ட உரிமையியல் நீதிபத் சந்தோஷ் வரவேற்றார். முடிவில் வழக்கறிஞர் சங்கச் செயலர் பெருமாள் பிரபு நன்றி கூறினார்

செய்தி: தினமணி

ஸ்ரீவை.,கேஜிஎஸ் பள்ளியில் ஐம்பெரும் விழா :இதயநோய் நிபுணர் பங்கேற்பு

ஸ்ரீவைகுண்டம் கேஜிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா நடந்தது.குடியரசு தினவிழாவை முன்னிட்டு பள்ளியின் 130வது ஆண்டு தொடக்கவிழா, பள்ளி முதல் தலைமையாசிரியர் ஸ்ரீனிவாசஅய்யங்கார் நினைவு தினவிழா, பள்ளி இணையதள தொடக்கவிழா, பள்ளி ஆண்டு விளையாட்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி ஆட்சிகுழு தலைவர் ராமாணுஜம் தலைமைவகித்தார். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். துபாய் ராய் நிறுவன துணைத் தலைவர் அருள்தாசன் பள்ளி இணைய தளத்தை தொடங்கி வைத்தார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மீனாட்சிமிசன் இதய நோய் நிபுணர் டாக்டர் ரகுராம் கொடி ஏற்றி, மரியாதை ஏற்று விழாவில் பேசியதாவது;

இன்று இந்திய தாய்திருநாடு பலதுறைகளில் முன்னேறி உள்ளது. இன்று நாம் 66 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்களாகி விட்டோம். அப்போது 200 நியூஸ் பேப்பர்கள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 2000 செய்திதாள்கள் இந்தியாவில் வெளியேறுகிறது.இன்று இந்தியாவை கண்டு அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் பயப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. ஆனால் 66 சதவீதம் கல்வி அறிவு பெற்ற நம்மில் மீதம் 34 சதவீதம் பேர் கல்வி அறிவு பெறாதது வருத்தம்தான். இன்னும் 65 சதவீதம் மக்கள் சுத்தமான குடிநீர் பெறுவது கிடையாது.

அடிப்படை தேவைகள் என்று கூறக்கூடிய படிப்பறிவு, மின்சாரம், சுகாதாரமான குடிநீர் போன்றவை நமது முழு தேவைகளை கொடுக்கும் அளவில் இல்லை. எனவே இந்தியாவின் முன்னேற்றம் சமநிலையில் இல்லை. உலகிலேயே பணக்காரர்கள், அறிவாளிகள் அதிகம் வாழக்கூடிய நாடு இந்தியாதான். அதேபோல் தரித்திரர்கள். லஞ்சம், கரப்சன் செய்பவர்கள் அதிகம் வாழக்கூடிய நாடும் இந்தியாதான் என்பதால் வெட்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

எல்லோரும் நூறு சதவீதம் மதிப்பெண்கள் வாங்க முடியாது எல்லோரும் டாக்டர், இன்ஜி.,என்றும் ஆக முடியாது. அதற்காக முயற்சி செய்ய வேண்டும். அது கிடைக்க வில்லை 40 மார்க்குகள்தான் எடுத்தோம் என்றால் அதற்காக வருத்தப்படவும் கூடாது. அதிக மதிப்பெண்கள் எடுத்தால் அறிவாளியும் இல்லை, குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் அவர் முட்டாளும் அல்ல. அறிவின் அளவுகோல் மார்க் அல்ல குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் மாணவர்கள் மனம் உடைந்து விடக்கூடாது.

உலகம் மிகப்பெரியது. பல்வேறு துறைகள் உள்ளது. அவைகள் உங்களுக்காக கதவுகளை திறந்து வைத்துள்ளது. எந்த தொழிலும் அநாகரிகம் கிடையாது. ஏனென்றால் மனிதரில் வேற்றுமை ஏதும் கிடையாது. மொழி மீது பற்று வேண்டுமே தவிர வெறி கூடாது. மனிதன் வாழ்வதற்கும், பிறறை வாழ்விப்பதற்கும் தான் பிறந்தானே தவிர நம்மை ஜாதி, மதம், மொழி என அழித்து கொள்வதற்காக அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இதுவே தான் நாம் கல்வி பெருவதின் நோக்கம் ஆகும். மனிதன் சாதிக்க பிறந்தவன். சாதிப்பதற்குள் மறைந்து விடக்கூடாது.

எல்லோரும் முதல்நிலை அடையமுடியாது. ஆனால் முயற்சிக்க வேண்டும். நான் டாக்டராக ஆவதற்கு இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் தான் காரணம். ஆசிரியர்கள் தந்த விளக்கம் என்னை இந்த நிலையில் கொண்டுவிட்டுள்ளது என்று பேசினார்.விழாவில் தலைமையாசிரியர் நல்லமுத்து வரவேற்றார்.


விழாவை சடகோபன், பள்ளி, கல்வி அபிவிருத்தி சங்க செயலர் சிவசுப்பிரமணியன், பள்ளி செயலர் சண்முகநாதன், ஆட்சிகுழு உறுப்பினர்கள் ராமசாமி, வைகுண்டபெருமாள், முகமது அப்துல் காதர், ஆழ்வை டவுன் பஞ்.,தலைவர் ஆதிநாதன், ஸ்ரீவை.,டவுன் பஞ்.,தலைவர் கந்தசிவசுப்பு, டிவிஎஸ்.ஆலோசகர் முருகன், ஸ்தலத்தார் வெங்கிடாச்சாரி, இன்ஜி.,பூபதிராம்குமார், முன்னாள் ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

செய்தி : தினமலர்

செவ்வாய், 26 ஜனவரி, 2010

ஸ்ரீவை, கேஜிஎஸ் பள்ளியில் இன்று 130 வது ஆண்டு தொடக்க விழா

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கேஜிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்ள்ளியில் குடியரசுதினத்தை முன்னிட்டு பள்ளியில் 130 வது ஆண்டு தொடக்க விழா, வி.ஆர் ஸ்ரீனிவாச அய்யங்கார் நினைவு தினவிழா, பள்ளி இணையதளம் தொடக்கவிழா, பள்ளி ஆண்டு விளையாட்டுவிழா ஆகிய ஐம்பெரும் விழா நடக்கிறது.

விழாவிற்கு பள்ளி முன்னாள் மாணவரான மீனாட்சிமிஷன் ஆஸ்பத்திரி டாக்டர் ரகுராம்,பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கிருஷ்ணமூர்த்தி, துபாய் ராய் நிறுவன துணைத்தலைவர் அருள்தாசன், பேச்சாளர் சடகோபன், மற்றும் பள்ளிநிர்வாக குழுவினர், மாணவர்கள் ஆசிரியர் கலந்துகொள்கின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்துவருகின்றனர்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

பர்தா விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு

வாக்காளர் அடையாள அட்டைக்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து புகைப்படம் எடுக்க அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

'வாக்காளர் அடையாள அட்டையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் ஹிஜாப் அங்கியை அணியாமல் படமெடுப்பது மத சம்பிரதாயத்தை மீறும் செயல். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சலுகை வழங்கவேண்டும்' எனக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த அஜ்மல் கான் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால், இக்கோரிக்கையை நிராகரித்து, மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை முஸ்லிம் சமுதாய அமைப்புகள் வரவேற்றுள்ளன.

டெல்லி சிறுபான்மையினர் ஆணைய தலைவர் மற்றும் அகில இந்திய முஸ்லிம் தனிசட்ட வாரிய உறுப்பினருமான கமால் ஃபரூக்கி இதுபற்றி கூறுகையில்,

'ஹஜ் பயணத்துக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் எடுக்க முகத்தை மூடாமல் தான் புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம். அப்படியிருக்கும் போது வாக்காளர் அட்டை விஷயத்தில் ஏன் பிரச்னை எழுப்ப வேண்டு்ம.

புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பது நாட்டுக்கு மிகவும் அவசியமானது. பொது நலனுக்கான அரசின் நடவடிக்கைக்கு மத விவகாரங்கள் தடையாக இருக்கக் கூடாது என நீதிபதிகள் கூறியதை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

'இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிவது கட்டாயம் தான் என்றாலும், சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள சட்டத்திலேயே அனுமதி அளிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட காரணங்களுக்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை' என்று முஸ்லிம் சட்டவாரிய உறுப்பினர் காலித் ரஷீத் கூறியுள்ளார்.

மேலும், 'உடல்நலம் சரியில்லை என மருத்துவரிடம் போகிறோம். அப்போது முகத்தை காட்டமாட்டேன் என சொல்ல முடியுமா? அதுபோல வாக்காளர் அட்டை முக்கியமானது என்பதால் சம்பிரதாயத்தை தளர்த்திக் கொள்வதில் தவறேதும் இல்லை' என பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் கருத்து தெரிவித்துள்ளன.

எனினும், 'ரொம்பவும் மதரீதியாக உணர்ந்தால், ஓட்டுப் போடவே வேண்டாம்' என உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டது வருத்தமளிப்பதாக சில இமாம்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, அகில இந்திய ஷியா தனிச்சட்ட வாரிய செய்தித் தொடர்பாளர் கூறும்போது, 'வாக்காளர் பட்டியலுக்காக முஸ்லிம் பெண்கள் காது பகுதியை சேர்த்து தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்தபடி புகைப்படம் எடுக்க அனுமதிக்கலாம்.

இதுதொடர்பாக தெளிவான சட்டம் இருக்கவேண்டும். இல்லையெனில் முஸ்லிம் பெண்களில் ஒருபகுதியினர் தேர்தலில் பங்கேற்க இயலாத வாய்ப்பு ஏற்படலாம்.

அந்தவிதத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஓட்டுக்களை சிதைப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதியாகக் கூட இதை சந்தேகிக்க வாய்ப்புள்ளது' என்றார்.

செய்தி : ஒன் இந்தியா

2010க்கான ஹஜ் பயணத்திற்கு சர்வதேச பாஸ்போர்ட்: தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் உடனடியாக சர்வதேச பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஹஜ் விசா பெறுவதற்கு பயணிகள் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம் என சவூதி அரேபிய அரசு முடிவு செய்துள்ளதாக மும்பை, இந்திய ஹஜ் குழுவின் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஹஜ் 2010க்கு புனித பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் விண்ணப்பிக்கும்போது பன்னாட்டு பாஸ்போர்ட்களை தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

ஹஜ் 2010க்கு புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தங்களிடம் பன்னாட்டு பாஸ்போர்ட் தற்போது இல்லாதிருப்பின் அதற்காக இப்போதே விண்ணப்பிக்க தயாராக வேண்டும்.

ஹஜ் 2010க்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம். இந்தக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி சர்வதேச பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

நன்றி- ThatsTamil

ஜோதிபாசு மறைவு ஸ்ரீவை.,யில் சர்வகட்சி அஞ்சலி

ஸ்ரீவைகுண்டத்தில் மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் மறைவை ஒட்டி, அனைத்து கட்சியினரின் இரங்கல் ஊர்வலம் நடந்தது.சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியின் தலைவருமான ஜோதிபாசுவின் மறைவை ஒட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த ஊர்வலத்திற்கு முருகன் தலைமை வகித்தார்.

திமுக.,நகர செயலாளர் பெருமாள், ஐ.என்.டி.யு.சி., தலைவர் சந்திரன், பா.ஜ.,கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா, இளைஞரணி பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம், மதிமுக.,மாவட்ட துணைச் செயலாளர் காசிராஜன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ஏரல் நகர செயலாளர் பெஸ்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுவாமிதாஸ், பெருங்குளம் ரவி, சண்முகசுந்தரம், சங்கர நாராயணன், தங்கவேல் மற்றும் அனைத்து கட்சியினர் ஜோதிபாசுவின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

செய்தி : தினமலர்

வியாழன், 21 ஜனவரி, 2010

ஸ்ரீவைகுண்டத்தில் இருத்து பஸ்களை மீண்டும் விடக்கோரி தமுமுக., கோரிக்கை

கொங்கராயகுறிச்சி ஆறாம்பண்ணை வழியாக சென்ற பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என தமுமுக.,வினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமுமுக.,மாவட்ட துணைத் தலைவர் நவாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் ரியாஸ்கான், கிளைத் தலைவர் நாகூர்கனி, கிளைசெயலாளர் பாருக், கிளைச் செயலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் எம்.எல்.ஏ.,சுடலையாண்டியிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி வழியாக சென்ற பஸ்களை தடைபடாமல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்னர்

செய்தி : தினமலர்

ஸ்ரீவைகுண்டத்தில் திமுக.,கொடியேற்று விழா

ஸ்ரீவைகுண்டத்தில் திமுக.,சார்பில் கொடியேற்று விழா நடந்தது. தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்.,18 வார்டுகளிலும் திமுக.,நகர கழகம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு நகர செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார்.

நகர அவைத் தலைவர் துரைசிங்கம், துணை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட பிரதிநிதி முத்தையா, மைனர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கவுன்சிலர்கள் இசக்கிபாண்டி, பொன்பாண்டி, பராசக்தி, வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம், ஜெயபால், முத்துராஜ், குமார், மகராஜன், முத்து, பலவேசம், ரவி, அறங்காவலர்குழு உறுப்பினர் முருகேசன், முன்னாள் நகர பொருளாளர் செல்லையா மற்றும் வார்டு செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி : தினமலர்

புதன், 20 ஜனவரி, 2010

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது...விஜய் டிவி அலுவலக முற்றுகை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்...



முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது மிகவும் கேவலமானது, ஒவ்வொரு பெண்களையும் நிர்பந்தபடுத்தி தான் பர்தா அணிய வைக்கின்றார்கள் என்று வக்கிரச் செய்தியை முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பத் துடிக்கும் விஜய் டிவியே! முஸ்லிம்களுக்கு எதிரான மதத்துவேச நிகழ்ச்சியை ஒளிபரப்பாதே. ஒளிபரப்பமாட்டோம் என்ற உறுதிமொழியை வருகின்ற வியாழன் இரவுக்குள் (14-1-2010) வழங்கவில்லையானால் 15-1-2010 மாலை 4 மணிக்கு விஜய் டிவி அலுவலகம் முஸ்லிம்களால் முற்றுகையிடப்படும் இன்ஷா அல்லாஹ்!

விஜய் டிவியின் இந்த வக்கிரச் செய்தியை ஒளிபரப்பாமல் நிறுத்தக் கோரி சென்னை மாநகர காவல்துறை கமிஷனிரிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று (11-1-2010) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒளிரப்பப்பட்டால் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த கொந்தளிப்பு ஆளாகும் எனவே மத துவேசத்தை பரப்பும் இந்த நிகழ்;சி தடை செய்யப்பட வேண்டும் விஜய் டிவிக்கும் எச்சரிக்கை கடிதம் நேற்று (11-1-2010) நேரடியாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளால் வழங்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஸ்டார் விஜய் டிவிக்கு நேரடி விவாதத்திற்கு பகிரங்க அழைப்பு:

போலிமதவாதிகளை வைத்து இஸ்லாத்தை கொச்சைபடுத்தும் இந்த போக்கை கைவிட்டு விட்டு பர்தா அணிவது தான் பெண்ணினத்திற்கு பாதுகாப்பானதும் கண்ணியமானது என்பதை நிருபீக்க நேரடி விவாதத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக இருக்கின்றது என்ற பகிரங்க விவாத நேரடி விவாத அழைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் மற்றும் விஜய் டிவிக்கு கொடுக்கப்பட்ட கடிதம்





ஈமெயில் உதவி : Mr. நெல்லை சிந்தா, கத்தார்

திருநெல்வேலி, தூத்துக்குடி சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகாம்

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய திருச்சி மற்றும் சேலத்தில் சிறப்பு முகாம்கள் 4 நாள்கள் நடைபெறவுள்ளன. இதில்,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு வேலைப் பிரிவுகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஆயிரக்கணக்கான மனுதாரர்களை பணியமர்த்தியுள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலையளிப்போரிடம் இருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதால் பயனாளிகளின் நேரம், பயணம் மற்றும் செலவினை போக்கும் பொருட்டும் அவர்கள் பகுதிக்கே வந்து நேரடியாக பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திருச்சி மற்றும் சேலத்தில் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளது.

வரும் 23 மற்றும் 24 தேதிகளில் (சனி, ஞாயிறு) திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், 30 மற்றும் 31 தேதிகளில் (சனி, ஞாயிறு) சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகாம்களில் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் 4 புகைப்படத்துடன் வந்து கலந்து கொள்ளலாம். அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இல்லாதவர்களும், கல்வி அல்லாத தொழில் அனுபவம் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.

பதிவு கட்டணமாக லேபர், கொத்தனார், கார்பெண்டர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயிண்டர் முதல் ஐ.டி.ஐ. டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஹோட்டல் பணியாளர்கள், பட்டப் படிப்பு படித்தவர்கள் வரையிலான பணியிடங்களுக்கு ரூ. 442-ம், நர்ஸ், பாரா மெடிக்கல் டெக்னீஷியன்கள் மற்றும் அனைத்து மருத்துவப் பணியாளர்கள், பொறியியல் பட்டப்படிப்பு, முதல் நிலை இன்ஜினீயரிங், முதுநிலை கணக்காளர், முதுநிலை பட்டதாரிகள், முதுநிலை மேலாண்மை படித்தவர்கள், கணினி பட்டப் படிப்பு வரை ரூ. 772-ம், டாக்டர்கள் ரூ. 995-ம் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு நிறுவனத்தின் இந்த சிறப்பு பதிவு முகாமின் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9444690026, 9381800181, 9940276356 ஆகிய செல்போன் எண்களிலும், 044- 24464268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி: தினமணி

புதன், 13 ஜனவரி, 2010

செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்'


செல்போனில் பேசினால் `மறதி' குணமாகும்' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. `அல்ஷ் கெய்மெர்ஷ்' என்ற மறதி நோயினால் உலகில் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். மூளையில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழப்பதால் இந்த நோய் உருவாகிறது.

இந்த நோயை ஜெர்மனியை சேர்ந்த `ஆலியோஸ்' என்ற விஞ்ஞானி கடந்த 1906-ம் ஆண்டு கண்டு பிடித்தார். அன்று முதல் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தான் இந்த நோயை குணப்படுத்த புதிய யுக்தி ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து செல்போன் பேசுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என ஆய்வு மூலம் தெளிவு படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய ஆய்வை மேற்கொண்டனர். இவர்கள் 96 எலிகளுக்கு நாள் ஒன்றுக்கு இருமுறை செல்போன்கள் மூலம் எலக்ட்ரோ மேக்னடிக் அலை கற்றைகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாய்ச்சினர்.

இதன் மூலம் அல்ஷ்கெய் மெர்ஷ் நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் நினைவாற்றல் அதிகரித்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் செல்போனில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் அலைக்கற்றைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு
ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்

நன்றி : நெல்லை சித்தா
கத்தார்

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

கடலோர கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு : மூன்றாம் கட்டமாக பணிகள் துவக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 3ம் கட்டமாக துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 23ம் தேதிமுதல் 27ம் தேதிவரை அமைக்ப்பட்டுள்ள மையங்களில் கணக்கெடுப்பு அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.

போட்டோ மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்திட வரும் 15 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இரண்டாம்கட்ட கணக்கெடுப்பு பணியின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டுடன் குறிப்பிடப்பட்ட நாட்களில் மையத்தில் வந்து பதிவு செய்துகொள்ளவேண்டும்.

ஏற்கனவே நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணியில் விடுபட்ட நபர்கள் இருந்தால் அவர்களும் தங்கள் வயது தொடர்பான ஆவணங்களுடன் வந்து கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் ஆஜாராகி உரிய விவரங்கள் அளித்தால் அவரது பெயர் அவரது குடும்பத்தினருடன் பதிவுகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி : தினமலர்

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

இன்று ( 10 -01- 2009 ) நமது ஊர் பெரிய பள்ளிவாசல் தெருவை சார்த்த ஹாஜி S.A. சித்திக் அவர்களின் மகனுக்கும், நெல்லை டவுன் சார்த்த ஜனாப் ஹசன் மைதீன் அவர்களின் மகளுக்கும், பாளையங்கோட்டை சாந்தி நகர் 60 அடி ரோடில் உள்ள T.E.S.K. மகாலில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்கள் ஹக்கில் அனைவரும் துவா செய்து கொள்ளயோம்.

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்

வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

வெள்ளி, 8 ஜனவரி, 2010

தவிர்ந்து கொள்ளுங்கள்

கஞ்சத்தனம்
இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.
அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில்
கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)
“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகளணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரது அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1433, 1444)
கஞ்சத்தனம் செய்து சேமித்து வைக்கும் பலரின் பணம் இரவோடு இரவாக திருடப்பட்டு
விடுவதையும், அவர்களுக்குப் பெரும் செலவை இழுத்து வைக்கும் நோய்கள் வருவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சந்தேகம் கொள்வது
நமக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் தவறான வீண் சந்தேகம் தான். கணவன், மனைவி, நண்பர்கள், நிர்வாகம் என அனைத்து மட்டத்திலும் கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடிய கொடிய நோயாக உள்ளது இந்த சந்தேகம் தான்.ஒருவர் ஒரு நேரத்தில் செய்த தவறான நடவடிக்கைகளை வைத்து அவருடைய அனைத்துச் செயல்களையும் குற்ற உணர்வோடு நம்முடைய மனதில் நாமே ஒரு மாயையை உருவாக்கி அதற்குச் செயல் வடிவம் கொடுத்து விடுகிறோம். இது தவறிலிருந்து ஒருவர் திருந்தாமல் மீண்டும் அவர் அந்தத் தவறைச் செய்வதற்குத் தூண்டுவதாகவும் அமைந்து விடும்.
இதனால் தான் இஸ்லாம், அவர் தவறு செய்யும் கட்டத்தில் உள்ள அந்த நிலையை மட்டும்
எடுத்துக் கொள்ளச் சொல்கிறது சாட்சி இருந்தால் தான் அந்தத் தவறைக் கூட உண்மைப்படுத்துகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் பாருங்கள்:
நம்பிக்கை கொண்டோரே! ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)
“(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கன் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்”
என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: புகாரி 5143)எந்த அடிப்படையும் இல்லாமல் தவறான எண்ணம் கொள்வது மிகப் பெரிய பொய் செல்வதைப் போன்றதாகும் என்று நபிகளார் எச்சரித்துள்ளதைக் கவனத்தில் கொள்க!
தீய பேச்சுக்கள்
நம் நாவிலிருந்து உதிரும் பேச்சின் கடினத்தை விளங்காமல் அடுத்தவரது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்களுக்கு நபியவர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதோ:
“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)
இதைப் போன்று
, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர்
தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)
மோசடி
நம்பிக்கை மோசடி இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. வியாபாரம் என்றால் அதில் பல வகையில் நூதனமாக மோசடி செய்கிறார்கள். இவ்வாறு மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும். மறுமை நாளில் நரகத்தின் அடித்தட்டில் கடும் வேதனைப்படும் நயவஞ்சகர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் என்று கூறியுள்ளார்கள். நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்
; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3333)
முகஸ்துதி
தனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன்? அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக! வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக! இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நம் இறைவன் (காட்சியப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெப்படுத்தும் அந்த (மறுமை) நால், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறி விடும்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (4919)
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நால்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்:
புகாரி (6499)
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.
இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு,
அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று, அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி
முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று
கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)
பேராசை
செல்வத்தைத் தேடலாம். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதைத் தேடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி இறைக்கடமைகளை புறக்கணித்து விடக் கூடாது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைக் கொண்டு அலைந்தால் மனநிம்மதியும் இழந்து மார்க்க ஒழுங்களை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகளை பாருங்கள்.
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகி றேன்” என்று சொன்னார்கள். “
இவன்
நெல்லை ஹமீது

அபுதாபியில் இஸ்லாத்தை ஏற்ற பழனியப்பன்


அபுதாபி மண்டலத்தில் அமைந்திருக்கும் தாஸ் தீவில் வேலை பார்த்து வரும் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சார்ந்த சகோ.பழனியப்பன் கருப்பையா அவர்கள் திருமறைக்குர்ரானை படித்து அதன் மூலம் தெளிவு பெற்று தூய இஸ்லாத்தினை ஏற்க விரும்புவதாக அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள்.

சகோதரர் அவர்களுக்கு தக்க விளக்கம் அளிக்கப்பட்டதென் பேரில் தாஸ் தீவில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் வைத்து 30/12/2009 அன்று இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்ரதுர்ரஹீம் என் மாற்றிக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்…

இதனை தொடர்ந்து தாயகம் செல்வதற்காக 02/01/2010 அன்று அபுதாபி நகருக்கு வருகை தந்த சகோதரர் அவர்களை அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் சகோதரர்கள் நேரில் போய் சந்த்திதனர்.

சந்திப்பின் போது சகோதரர் அவர்களுக்கு ஏராளமான மார்க்க விளக்க புத்தகங்களும் குறுந்தகடுகளும் வழங்கப்பட்டது. மேலும் சகோதரர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

மேலும் அவரிடம் “நீங்கள் எதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கேட்ட போது “ எனக்கு ஆரம்பம் முதலே கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், காலில் விழுவது , வரிசையில் இருந்து கடவுளை வணங்குவது என்பது போன்ற செயல்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றும் பகவத்கீதையை விட திருக் குர்ஆனைத்தான் நான் அதிகமாக படித்திருக்கின்றேன் என்றும், ஆயிரத்து நானுறு வருடத்திற்கு முன்பு இறக்கப்பட்ட குரான் இன்னமும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பதையும் அதை ஒரு எழுதப்படிக்க தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாமாகவே இதை கட்டாயமாக எழுதியிருக்க முடியாது என்பதையும் சிந்தித்து இதுதான் ஒரு உண்மையான வேதம் என்று ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.

நன்றி : அதிரை போஸ்ட்

வியாழன், 7 ஜனவரி, 2010

World's tallest building is now Burj Khafia


Dubai, UAE; January 4, 2010: The world's tallest tower, developed by Emaar Properties, was unveiled tonight to a crowd of thousands and the world in a crescendo of fireworks, lasers and fountain displays.

The official height of the tower, unveiled as 'Burj Khalifa', was announced as 828 metres (2,716.5 ft).

A closely guarded secret, the official height of Burj Khalifa was flashed onto a giant screen before an estimated crowd of more than 400,000, as lasers and fireworks lit up the night sky.

Fireworks cascaded from the tower's spire to the base and lasers blazed out from all levels leaving the crowds awestruck.

The height was disclosed in arithmetic progression, with the numbers being flashed onto the screen, one after another. The tower's height breaks all existing world records for tall buildings.

Burj Khalifa is the tallest building in the world according to the three main criteria of the Council on Tall Buildings and Urban Habitat (CTBUH). The CTBUH ranks the world’s tallest buildings based on ‘Height to Architectural Top,’ ‘Height to Highest Occupied Floor’ and ‘Height to Tip.’

At 828 metres (2,716.5ft), Burj Khalifa is 320 metres taller than Taipei 101, which at 508 metres (1,667 ft) had held the record for the world’s tallest building measured to the architectural top since 2004, the year the project was announced.

Burj Khalifa achieved the distinction of being the world's tallest structure – surpassing the KVLY-TV mast (628.8 metres; 2,063 ft) in North Dakota, USA – 1,325 days after excavation work started in January 2004.

The tower also beats the 31-year-old record of CN Tower, which at 553.33 metres (1,815.5 ft) had been the world’s tallest free-standing structure on land since 1976.

Burj Khalifa employs a record-breaking 330,000 cubic metres of concrete, 39,000 metric tonnes of steel rebar and 142,000 square metres of glass; and it took 22 million man hours to build.

Other world records for Burj Khalifa include the highest occupied floor in the world, at over 550 metres (1,800 ft); the highest outdoor observation deck in the world – At the Top on Level 124; and the tallest service elevator, which travels to a height of 504 metres (1,654 ft).

Mr. Mohamed Alabbar, Chairman, Emaar Properties, said that with the unveiling of the final height of Burj Khalifa, the world now had a new reference point for high-rise developments.

“Burj Khalifa is an example of collaboration on a global scale, and the tremendous positive energy that can be generated when people from all over the world come together to work towards a common goal. Thousands of professionals and skilled workers from around the world worked on this once-in-a-lifetime project.”

“More than 60 of the world’s leading consultants including South Korea’s Samsung Corporation and New York-based Turner Construction International realised the design for Burj Khalifa of Chicago-based Skidmore, Owings and Merrill (SOM),” he said.

Burj Khalifa employed the latest advances in wind engineering, structural engineering, structural systems, construction materials and methods. All design considerations took into account the 12,000 people who will live and work in the tower. The handover to residents of the various components of Burj Khalifa will begin in February.

With a total built-up area of about 6 million sq ft, Burj Khalifa features nearly 2 million sq ft of residential space and over 300,000 sq ft of prime office space, in addition to the area occupied by the keenly awaited Armani Hotel Dubai and the Armani Residences. The tower also features modern lifestyle amenities including clubs, health and fitness facilities, gourmet restaurants and the 124th floor observation deck, 'At the Top.'

Burj Khalifa is the focal point of the 500-acre ‘mega-project’ by Emaar Properties, described as the new heart of Dubai.














INAUGURATION PHOTS






FIRE WORKS

Fireworks to mark Burj Dubai inauguration

The inauguration of Burj Dubai, the world’s tallest building, developed by Emaar Properties, will feature a spectacular display of sound, light, water and fireworks on the evening of Jan 4.

A combination of dazzling fireworks, light beams, choreographed water displays, and sound & music effects will describe the evolution of the world’s most iconic new building in a breathtaking sensory journey.

In all, 868 high-powered ‘stroboscope’ lights will be integrated into the facade of Burj Dubai and the tower’s spire – and each stroboscope will be fired individually to create a series of hypnotic lighting sequences.

The entire display is controlled by a sophisticated arrangement of ultra high-tech IT systems, which choreograph at least 50 different sequences of lighting, fireworks, water and sound effects.

Event experts from France, Britain and the United States collaborated on the project, demonstrating the global spirit of teamwork which defines Burj Dubai itself.

Powerful strobe lights will be fixed near the pinnacle of the tower, and six ‘narrow beam’ search lights will be positioned 700 metres up the tower.

The entire inauguration show consists of a pre-show and three themed acts – From the Desert Flower to Burj Dubai, Heart Beat, and From Dubai & the UAE to the World - and a firework finale.

A giant screen on Burj Park Island, as well as several television screens placed across Downtown Burj Dubai including the Waterfront Promenade, will broadcast the inauguration in real-time. Hundreds of international media, including Dubai TV, will report live from the scene.

The public can watch at the inauguration ceremony from the Waterfront Promenade adjacent to The Dubai Mall.

The inauguration performance begins with a short film which depicts the story of Dubai and the evolution of Burj Dubai as the world’s tallest building. A precisely choreographed sound, light, water and fireworks display then follows.

The first act in the light & sound show, themed ‘From the Desert Flower to Burj Dubai,’ is a co-ordinated water, light and firework display. Guests can watch the unfolding of the desert lily, Hymenocallis, the design inspiration of Burj Dubai. The segment ends with a rhythmic water and fireworks show.

The second act, ‘Heart Beat,’ captures the construction of the tower in a dynamic light show. An astonishing example of technological innovation, the display recreates the effect of a beating heart and uses no fewer than 300 ‘space canon projectors’ to generate a shadow-like image of the tower.

In the third act, ‘From Dubai and the UAE to the World,’ sky tracers and space canons envelop the tower in a strong halo of white light before reproducing the sun beams of the Emaar corporate logo. These then expand in all directions as the lighting rig on the tower’s spire activates.

In its spectacular finale, the show will feature an impressive show of 10,000 firework effects on and from the tower, envisaged as the highest in the world. The sparkling display will illuminate the entire Downtown Burj Dubai area.

Ahmad Al Matrooshi, Managing Director, UAE, Emaar Properties, said that the performance would be unprecedented and symbolic of Burj Dubai’s pioneering status.

“Just as Burj Dubai leaves an indelible impression on the mind’s eye, so the performance dedicated to the tower’s inauguration on January 4 will be a memory to cherish.”

Standing at more than 800 metres (2,625 ft) high and with over 160 storeys, Burj Dubai is the world’s tallest building developed by Emaar Properties. The tower anchors the 500-acre Downtown Burj Dubai community, described as the new heart of the city.







Thanks To Mr.Nellai Sindha, Dubai

நெல்லையில் அறிவியல் கண்காட்சி ரயில்


திருநெல்வேலிக்கு வந்த அறிவியல் கண்காட்சி ரயிலை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்திநகரில் இருந்து இக்கண்காட்சி ரயில் புறப்பட்டது. வடமாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று விட்டு, இந்த ரயில் கடந்த 4-ம் தேதி திருவனந்தரம் வழியாக செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வந்தது.

ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயிலில் உள்ள அறிவியல் கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

ரயில் நிலைய மேலாளர் கல்யாணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், பள்ளி மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று ரயிலில் உள்ள கண்காட்சி அரங்கை கண்டு ரசித்தனர்.

கண்காட்சியில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அரிய தகவல்களுடன் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அனைத்து தகவல்கள், விளக்கங்கள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்று இருந்தன. இதனால், பள்ளி மாணவிகள் அதைப் படித்து புரிவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த கண்காட்சி ரயிலில் அரங்கை பற்றி விளக்கிட 38 பேர் உள்ளனர். இவர்களில் 3 பேர் தமிழ் பேச தெரிந்தவர்கள். பெரும்பானவர்கள் இந்தி, ஆங்கிலத்தில் பேசியதால் மாணவர்கள் அவர்கள் கூறியதை புரிந்து கொள்ளுவதில் சிரமப்பட்டனர். மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களும், மாணவர்களுடன் அரங்கை பார்த்து ரசித்து வந்தனர்.

இந்த கண்காட்சியை 8-ம் தேதி வரை பார்க்கலாம். அதன்பின் இந்த ரயில் திண்டுக்கல் செல்லும்

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு பிஇ-எம்எபிபிஎஸ் இலவச கல்வி


சட்டசபையி்ன் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் தொடங்கிய இக் கூட்டத்தில் அவரது உரையில் தமிழக அரசின் பல புதிய திட்டங்கள் இடம் பெற்றன.

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இலவச கல்வி அளிக்கப்படும். இதற்கு வருமான மற்றும் ஜாதி சான்றிதழ்கள் ஏதும் தேவையில்லை. வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார்.

தொடர்ந்து அவர் உரையாற்றிக் கெண்டுள்ளார்.

அபுதாபியில் இன்று ஸையித் ச‌ர்வ‌தேச‌ மார‌த்தான் 2010

அபுதாபி : அபுதாபியில் ஜ‌ன‌வ‌ரி 7 ஆம் தேதி ஸையித் ச‌ர்வ‌தேச‌ மார‌த்தான் 2010 அபுதாபி கோர்னிச் ப‌குதியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இப்போட்டி அமீர‌க‌ துணை பிர‌த‌ம‌ர் ஷேக் ம‌ன்சூர் பின் ஸையித் அல் ந‌ஹ்யான் அவ‌ர்க‌ள‌து ஆத‌ர‌வில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

ப‌த்து முத‌ல் ப‌தினைந்து வ‌ய‌துடைய‌வ‌ர்க‌ள் மூன்று கிலோமீட்ட‌ர் தூர‌ ஓட்ட‌த்திலும், பொதும‌க்க‌ள் ம‌ற்றும் ஊன‌முற்றோர்க‌ளுக்கான‌ 6 கிலோ மீட்ட‌ர் தூர‌ ஓட்ட‌த்திலும், ஓட்ட‌ப் ப‌ந்த‌ய‌ வீர‌ர்க‌ளுக்கான‌ 21 கிலோ மீட்ட‌ ஓட்ட‌த்திலும் ப‌ங்கேற்க‌லாம். க‌வ‌ர்ச்சிமிகு ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ இருக்கின்ற‌ன‌.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 02 4415900 எக்ஸ்டென்ஷ‌ன் 2308
இணைய‌த்த‌ள‌ம் : www.zayedmarathon.com

சனி, 2 ஜனவரி, 2010

இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் சேவைக‌ள்

துபாயில் இந்திய‌ துணைத் தூத‌ர‌க‌ம் (consulate ) செய்து வ‌ரும் சேவைக‌ள் குறித்தும், அவ‌ச‌ர‌ உத‌விக்கு தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண் ( 050 9433111 ) உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌க‌வ‌ல்க‌ளும் துபாயில் ப‌ல்வேறு ப‌குதிக‌ளிலும் உள்ள‌ பேருந்து நிறுத்த‌ங்க‌ளிலும் அறிவிப்புப் ப‌ல‌கைக‌ள் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

தொழிலாள‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு ஏற்ப‌டும் பிர‌ச்ச‌னைக‌ள் குறித்து யாரிட‌ம் தெரிவிப்ப‌து என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய‌ துணைத் தூதரகம் மேற்கொண்டுள்ள‌ இத்த‌கைய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் தொழிலாள‌ர்க‌ள் எளிதில் தொட‌ர்பு கொண்டு த‌ங்க‌ள‌து குறைக‌ளை நிவ‌ர்த்தி செய்ய‌ உத‌வியாய் இருக்கும்.

இத்த‌கைய‌ த‌க‌வ‌ல்க‌ள் சுமார் 700 க்கும் மேற்ப‌ட்ட‌ பேருந்து நிறுத்த‌ங்க‌ளில் காண‌ப்ப‌டுவ‌து அங்கு வசிக்கும் இந்திய‌ர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

இந்திய‌ துணைத் தூதரதத்தை http://www.cgidubai.com எனும் இணைய‌த்த‌ள‌ம் மூல‌மும் தொட‌ர்பு கொள்ளலாம்

நன்றி : நெல்லை சிந்தா
துபாய்.

2009ம் ஆணடில் தமிழகம்: முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

8- சென்னை துறைமுகம், கோயம்பேடு இடையிலான உயர் மட்ட பாலத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டினார்.

12- திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் லதா அதியமான் வெற்றி பெற்றார்.

13 - தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி நியமிக்கப்பட்டார்.

19 - விடுதலைப் புலிகளுக்கு ஆதராகப் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்தது.

- சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது.

21 - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்புறுதித் திட்டத்தை ஆளுநர் பர்னாலா சட்டசபையில் அறிவித்தார்.

26 - கடும் முதுகு வலியால் அவதிப்பட்ட முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

28- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிப்ரவரி

2 - சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

8- தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர் சைமன், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளில் கொல்லப்பட்டார்.

- சன் டிவியின் காமெடி சானலான ஆதித்யா தனது ஒளிபரப்பைத் தொடங்கியது.

11 -முதல்வர் கருணாநிதிக்கு முதுகுத் தண்டவடத்தில் 11 மணி நேரம் அறுவைச் சிகிச்சை நடந்தது.

15- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தொடங்கப்பட்டது.

17 - தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

19 - சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் பெரும் மோதல் மூண்டு நாட்டையே அதிர வைத்தது.

20 - விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக புதுச்சேரியில் தொடரப்பட்ட வழக்கில், நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் சரணடைந்தார்.

22 -புதிய திருப்பூர் மாவட்டத்தை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

25 - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

26 - அருந்ததியர் இனத்தினருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

27 - ராஜ கண்ணப்பன் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

- பூங்கோதை ஆலடி அருணா மீ்ண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்.

28 - தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.

மார்ச்

7 - இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார்.

9- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எச்.எல்.கோகலே பதவியேற்றார்.

11 - மதிமுகவிலிருந்து மு.கண்ணப்பன் விலகினார். பின்னர் திமுகவில் இணைந்தார்.

12 - ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதுரையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

13 - சென்னையில் பிறந்து 3 நாளே ஆன கைக்குழநதையை கிணற்றில் வீசிக் கொலை செய்தார் அக்குழந்தையின் தந்தையான நிரஞ்சன் குமார்.
16 - இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ரூ. 2 கோடி நிதியை செஞ்சிலுவைச் சங்கத்திடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்படைத்தார்.

- நடிகர் ராதாரவி திமுகவில் இணைந்தார்.

19 - சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

- ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

23 - முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டித்தேவர் மரணமடைந்தார்.

26 - அதிமுக கூட்டணியில் இணைவது என பாமக பொதுக்குழு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுத்தது.

- கம்பம் ராமகிருஷ்ணன் மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

28 - லோக்சபா தேர்தலில் திமுக 21, காங்கிரஸ் 15, விடுதலைச் சிறுத்தைகள் 2, முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

- பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார். மத்திய அமைச்சர் பதவியிலிருந்து வேலு, அன்புமணி ராமதாஸ் விலகினர்.

29 - ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் கட்சியோடு திமுகவில் இணைந்தார்.

- சிபிஐக்கு 3 சீட் தருவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

ஏப்ரல்

1 - முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தேமுதிகவிலிரு்நது விலகி அதிமுகவில் இணைந்தார்.

3 - வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. காதர் மொய்தீன் வெற்றி பெற்றது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த விதிமுறைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி.

- சிபிஎம்முக்கு 3 சீட் ஒதுக்கினார் ஜெயலலிதா.

8 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

9 - அதிமுக 23 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும் போட்டியிடும் என ஜெயலலிதா அறிவித்தார்.

21 - நாஞ்சில் சம்பத் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

29 - சென்னையில் மின்சார ரயிலைக் கடத்திய மர்ம மனிதன் சரக்கு ரயிலுடன் அதை மோதினான். இதில் 4 பேர் பலியானார்கள்.

23 - இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம்.

25 - பாஸ்போர்ட் வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் செய்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கைது.

26- ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் மரணம்.

27- கொளத்தூர் மணியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

- விதிகளை மீறி மும்பை நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய வழக்கில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை.

மே

2 - கோவையில் ராணுவ லாரிகள் மீது பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்குதல்.

- தேமுதிக தேர்தல் பிரிவு செயலாளர் ஏ.ஜி.சம்பத், திமுகவில் இணைந்தார்.

6 -நாமக்கல் அருகே நடந்த தனியார் எண்ணை ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

10 - சென்னையில் சோனியா காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழ. நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்.

11 - டிவி நடிகை லட்சுமி கோபகுமாரின் பின்பக்கத்தில் தட்டியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கேரள முன்னாள் அமைச்சர் பி.ஜே.ஜோசப் விடுதலை.

12 - முன்னாள் தமிழக அமைச்சர் பி.டி.சரஸ்வதி மரணமடைந்தார்.

- பொய்யான குற்றச்சாட்டைக் கூறியதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்தார்.

13 - தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

21 - அமைச்சர் பதவிகள் மற்றும் இலாகாக்களில் திருப்தி இல்லை என்று கூறி அமைச்சரவையில் சேர முடியாது, வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவும் திமுக கூறியது. முதல்வர் கருணாநிதி டெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்பினார்.

- செக்ஸ் டாக்டர் பிரகாஷுக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

28 - இலாகாக்கள் மற்றும் அமைச்சர் பதவிகளில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோருடன் 59 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

- சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ராஜேந்திரன் பொறுப்பேற்றார்.

29 - மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.

31 - ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதன் மூலம் 30 சதவீத ஊதிய உயர்வு கிடைத்தது.

ஜூன்

7 - சென்னையில் நகை வியாபாரி சுரேஷ்குமாரின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் கைப்பற்றப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

8 - சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதல் தொடர்பான நீதிபதி சண்முகம் கமிஷன் அறிக்கை தாக்கல்.

10 - புழல் சிறையில் நடந்த பயங்கர மோதலில், வெல்டிங் குமார் கொல்லப்பட்டார்.

11- ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

16 - மதுரை அருகே 16 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

27 - சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் ஊராட்சித் தலைவர் ஜி.என்.ஆர்.குமார் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.

29 - தமிழறிஞர் வ.அய்.சுப்ரமணியம் மரணமடைந்தார்.

ஜூலை

1 - என்.எஸ்.ஜி. மையத்தை சென்னையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

5- ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வராஜ் மரணமடைந்தார்.

12 - துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டது.

16 - இசையரசி டி.கே.பட்டம்மாள் தனது 90வது வயதில் சென்னையில் காலமானார்.

20- பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.

23 - தனது கோபாலபுரம் வீட்டை தனது காலத்திற்குப் பின்னர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் என்ற பெயரில் இலவச மருத்துவமனை அமைக்க வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

29 - நடிகர் எஸ்.வி.சேகர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

- மதுரையில் கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட மகனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வெட்டிக் கொலை செய்து உடலை பிரிட்ஜுக்குள் போட்டு வைத்த தாயை போலீஸார் கைது செய்தனர்.

31 - அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். திமுகவில் இணைவதாக அறிவித்தார்.

ஆகஸ்ட்

1 - துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

4- சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் அதிரடி சிபிஐ ரெய்டு. ரூ. இரண்டே கால் கோடி மதிப்புள்ள பணம், நகை, சொத்து ஆவணங்கள் பறிமுதல்.

5 - ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜாவுக்கு ஆயுள் தண்டனை, 2 பேருக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பு.

10- பன்றிக் காய்ச்சலுக்கு தமிழகத்தில் முதல் பலி. சென்னையைச் சேர்ந்த சிறுவன் சஞ்சய் மரணமடைந்தான்.

12 - சென்னையில் கடற்கரை- தாம்பரம் உள்ளிட்ட 3 வழித்தடங்களில் மகளிர் சிறப்பு ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

- தமிழகத்தில் உறுப்பு தானத்திற்கு வித்திட்ட ஹிதேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 3 பேருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

13 - சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கன்னடக் கவிஞர் சர்வக்னரின் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா திறந்து வைத்தார்.

20- தங்கபாலு மீதான சொத்துக் குவிப்பை விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி.

- நாட்டிலேயே முதல் முறையாக தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திறந்து வைத்தார்.

21 - ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்திலும் வெற்றி. கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழந்தன.

- கலர் டிவி வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

24 - சென்னை அருகே பனையூரில் முன்னாள் கப்பல் கேப்டன் இளங்கோவனும், அவரது மனைவி ரமணியும் சினிமா பாணியில் நடந்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பிடிபட்ட சண்முகராஜன் என்பவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

26 - 2010ம் ஆண்டிலிருந்து முதல் கட்டமாக 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்ததப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

28 - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூன்றரை மணி நேரத்தில் 14 பெண்களுக்கு நடந்த மார்பக அறுவைச் சிகிச்சை சர்ச்சையை ஏற்படுத்தியது.

- உறுப்பு தானம் செய்வதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் அறிவித்து ஆவணத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

31 - முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பாக கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

செப்டம்பர்

1- இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடத் தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு.

8 - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

13 - திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட பெங்களூர் சிறுமி அபிராமி சென்னையில் மரணம்.

15 - அண்ணா நூற்றாண்டையொட்டி கோவை குண்டுவெடிப்புக் கைதிகள் 9 பேர் விடுதலை.

- சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க தமிழக அரசுக்கு உரி்மை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

16 - தென்கச்சி சுவாமிநாதன் சென்னையில் மரணமடைந்தார்.

17 - சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதலாவது இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

18 - தமிழக மீனவர்கள் 21 பேரை கடத்திச் சென்றது இலங்கைக் கடற்படை. முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

21 - சென்னை- டெல்லி இடையிலான அதிவேக எங்கும் நிற்காமல் செல்லும் ரயிலை ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

- நளினி வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தில் குதித்தார்.

24 - சென்னை அசோக் நகரி்ல அனந்தலட்சுமி என்ற பெண்மணியும், அவரது மகனும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- திருவண்ணாமலையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் வீடு தரைமட்டமானது. அதில் இருந்த 15 பேர் கொல்லப்பட்டனர்.

26 - காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருதினை திமுக வழங்கியது.

30 - திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் திறந்து வைத்தார்.

- தேக்கடியில் நடந்த படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 47 பேர் பலியானார்கள்.

அக்டோபர்

1- அரியலூர் அருகே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனசோர் முட்டைகள் குவியல் குவியலாக கண்டுபிடிப்பு.

2 - நடிகை புவனேஸ்வரி வீட்டில் விபச்சாரம் செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

- திருச்சி அருகே திருவெறும்பூரில் பிரபல ரவுடி குரங்கு செந்தில் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

4 - அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக பாமக அறிவிப்பு.

6- மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் வெடிவிபத்து. 2 பேர் பலி. பட்டாசு வெடித்ததாக போலீஸார் அறிவிப்பு.

16 - திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் பட்டாசுக் கடையில் பயங்கர தீவிபத்து, 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

- கோவையில் உலகத் தமிழ் மாநாடு ஜூன் மாதம் 24ம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவிப்பு.

25 - முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

29 - சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முன்னாள் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

30- மதுரை முன்னாள் எம்.பி. மோகன் சென்னையில் மரணம்.

நவம்பர்

2 - வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெயராமன் சென்னையில் மரணம்.

3 - முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வு.

8- நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த பேய் மழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டமே ஸ்தம்பித்துப் போனது.

9 - முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.

12 - அகதிகள் முகாம்களின் மேம்பாட்டுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு. தமிழக அரசின் திட்டங்கள் அகதிகளுக்கும் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு.

14 - சேலம் சென்னை இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

16 - கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கோர்ட்டில் சரணடைந்தார்.

27 - கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசன் கோவை சாலை விபத்தில் மரணம்.

30 - அனைத்து மதத்தினரும் திருமணங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

டிசம்பர்

1 - பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் மரணம்.

3 - கூவம் நதி சீரமைப்புக்காக சென்னை நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது.

- வேதாரண்யத்தில் பள்ளிக்கூட வேன் கோவில் குளத்தில் பாய்ந்ததில், ஆசிரியை மற்றும் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 - சென்னை உயர்நீதிமன்ற மோதல் வழக்கில் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

5 - சென்னையில் அருந்ததியர் இன மக்கள் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியல், பதவிக்கு விடை கொடுத்து விடப் போகிறேன் என்று அறிவித்தார்.

9 - உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.

15 - தமிழகத்தில் மின்வாரியம் 3 ஆக பிரிக்கப்பட்டது. மின் தொடரமைப்புக் கழகத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

- தாராபுரத்தில் காடராக்ட் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 9 பேருக்கு பார்வை பறிபோனது.

18 - கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 18 பேருக்கு தண்டனையை உறுதி செய்தும், 22 பேரின் தண்டனையை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

19 - திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.

22 - உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் கோ.சி.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

23 - திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

24 - தமிழகத்தில் ஆம்பூர், மடத்துக்குளம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய புதிய தாலுகாக்கள் அமைக்கப்பட்டன.

27- பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

- சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்தது.

29 - கம்பத்தில் கேரள வாகனங்களை மறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.

30 - கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனின் நில ஆக்கரமிப்பு தொடர்பான சர்வே குழுவினரின் விசாரணை தொடங்கியது.

- பாஜக மாநிலத் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- பென்னாகரம் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்த கட்சிகளுடன் பேசி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

- எம்.ஜி.ஆர். வீட்டில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

- சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து திமுக எம்.எல்.ஏ. புரசை ரங்கநாதனும், அவரது மனைவியும் விடுதலை செய்யப்பட்டனர்.

- பழனி கோவில் கலசம் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: Thatstamil

LinkWithin

Blog Widget by LinkWithin