புதன், 20 ஜனவரி, 2010

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது...விஜய் டிவி அலுவலக முற்றுகை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்...



முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது மிகவும் கேவலமானது, ஒவ்வொரு பெண்களையும் நிர்பந்தபடுத்தி தான் பர்தா அணிய வைக்கின்றார்கள் என்று வக்கிரச் செய்தியை முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பத் துடிக்கும் விஜய் டிவியே! முஸ்லிம்களுக்கு எதிரான மதத்துவேச நிகழ்ச்சியை ஒளிபரப்பாதே. ஒளிபரப்பமாட்டோம் என்ற உறுதிமொழியை வருகின்ற வியாழன் இரவுக்குள் (14-1-2010) வழங்கவில்லையானால் 15-1-2010 மாலை 4 மணிக்கு விஜய் டிவி அலுவலகம் முஸ்லிம்களால் முற்றுகையிடப்படும் இன்ஷா அல்லாஹ்!

விஜய் டிவியின் இந்த வக்கிரச் செய்தியை ஒளிபரப்பாமல் நிறுத்தக் கோரி சென்னை மாநகர காவல்துறை கமிஷனிரிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று (11-1-2010) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒளிரப்பப்பட்டால் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த கொந்தளிப்பு ஆளாகும் எனவே மத துவேசத்தை பரப்பும் இந்த நிகழ்;சி தடை செய்யப்பட வேண்டும் விஜய் டிவிக்கும் எச்சரிக்கை கடிதம் நேற்று (11-1-2010) நேரடியாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளால் வழங்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஸ்டார் விஜய் டிவிக்கு நேரடி விவாதத்திற்கு பகிரங்க அழைப்பு:

போலிமதவாதிகளை வைத்து இஸ்லாத்தை கொச்சைபடுத்தும் இந்த போக்கை கைவிட்டு விட்டு பர்தா அணிவது தான் பெண்ணினத்திற்கு பாதுகாப்பானதும் கண்ணியமானது என்பதை நிருபீக்க நேரடி விவாதத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக இருக்கின்றது என்ற பகிரங்க விவாத நேரடி விவாத அழைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் மற்றும் விஜய் டிவிக்கு கொடுக்கப்பட்ட கடிதம்





ஈமெயில் உதவி : Mr. நெல்லை சிந்தா, கத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin