வியாழன், 1 செப்டம்பர், 2011

ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணிக்கும் அரசு பஸ் : கலெக்டரிடம் புகார்

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து செல்வதால் மக்கள் பரிதவித்து கொண்டிருப்பதாக கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் ஆஷீஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் முக்கியமான ஊராகும். இந்த ஊரில் உள்ள மக்கள் அரசு, தனியார் பணி நிமித்தமாக நெல்லைக்கு செல்கின்றனர். நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, கலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு படிக்க செல்கின்றனர்.

இதே போல் இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பணிக்கு ஒன்று நெல்லைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் தூத்துக்குடிக்கு வர வேண்டும். திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் அப்படியே மெயின் ரோட்டில் சென்று விடுகின்றன.

இதனால் இந்த பகுதி மக்கள் தினமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் இயங்கும் அரசு பஸ்களை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்வதற்கு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin