செவ்வாய், 21 ஜூன், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் அதிசயம் 4 செ.மீட்டர் உயரத்தில் நாட்டுக்கோழி முட்டை

ஸ்ரீவைகுண்டம் தெற்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன் யாதவ். இவர் பேருந்து நிலையத்தில் பேக்கிரி நடத்தி வருகிறார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக கால்நடைகளையும் விருப்பமுடன் வளர்த்து வருகிறார்.

இவர் வீட்டில் வளர்த்த கோழி ஒன்று பருவம் அடைந்த நாள் முதல் 3 அங்குல உயரத்தில் வழக்கமான அளவில் முட்டைகளை இட்டு வந்தது.

தற்போது முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகள் பொறிக்கப்பட்ட நிலையில், தாய் கோழி இடும் முட்டை 4 செ.மீட்டர் உயரத்தில் உள்ளது.

இதர முட்டைகளை விட பல மடங்கு சிறியதான பல்லி முட்டையை விட சற்று பெரியதாக காணப்படும் நாட்டுக்கோழி முட்டையை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

அதில் ஒரு முட்டையை உடைத்து பார்த்த போது,மஞ்சள் மற்றும் வெள்ளைக்கரு எனத் தனித்தனியாக இன்றி கலங்கிய நிலையில் அந்த முட்டை காணப்பட்டது.

இன்னும் ஓரிரு நாட்களுக்கு இதே அளவில் தான் அந்த கோழி முட்டை இடும் என ரங்கநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த அதிசய முட்டை ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களிடம் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin