செவ்வாய், 2 ஜூன், 2009

பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம்

தூத்துக்குடி மாவட்டத்தில், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளும், ஒரு சில மெட்ரிக் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் மட்டுமே புதன்கிழமை (ஜூன் 3) திறக்கப்படவுள்ளன.

கோடை விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். ஒன்றரை மாதங்களாக வெறிச்சோடிக் கிடந்த சாலைகள் பள்ளி மாணவ, மாணவிகள் வருகையால் மீண்டும் சுறுசுறுப்பாயின.

தூத்துக்குடி அருகேயுள்ள முடுக்குக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு திங்கள்கிழமை வந்த மாணவ, மாணவிகளுக்கு பூவும், இனிப்புகளும் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin