வியாழன், 4 ஜூன், 2009

காயல்பட்டினம் பள்ளியில் திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் துவக்கம்

காயல்பட்டினம் நெய்னா தெருவில் உள்ள மஸ்ஜித் ùஸய்யிதினா பிலாஸ் பள்ளிவாசலில் திருக்குர்ஆன் விளக்க உரை வகுப்புகள் துவங்கின.

காயல்பட்டினம் நெய்னா தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட மஸ்ஜித் ùஸய்யிதினா பிலாஸ் பள்ளிவாசல் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறந்துவைக்கப்பட்டது.

அங்கு நிரந்தர செயல்பாடுகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான திருக்குர்ஆன் வாராந்திர விளக்க உரை வகுப்புகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை தோறும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு துவங்கி இஷா பாங்கு வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை இமாம் முஹம்மது இப்ராகிம் மஹ்ழரி இதை இந்த வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin