ஸ்ரீவை செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீவை செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 நவம்பர், 2011

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உலகில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் நமது ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்குகிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த ஆண்டு ஹஜ் செய்த அனைத்து மக்களின் ஹஜ்
ஏற்று கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்திடவும், ஹஜ் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திடவும் துவா செய்து கொள்யோம்.

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

ஸ்ரீவை,எம்எல்ஏயின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டத்துக்கு கிடைத்த விஐபி அந்தஸ்தும் பறிக்கப்பட்டது


தமிழக அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் உட்பட ஆறு பேர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சண்முகநாதன் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். தேர்தல் நேரத்தில் அதிமுக வெற்றிக்காக கடுமையாக உழைத்த சண்முகநாதனுக்கு இந்த முறை ஜெ. இந்து அறநிலையத்துறை அமைச்சராக வாய்ப்பளித்தார்.

இதன் மூலம் ஸ்ரீவைகுண்டத்துக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கிடைத்தது.ஆனால் அது 5 மாதத்தில் பறிக்கப்பட்டது.இதை போல் 2001 ஆண்டும் ஸ்ரீவைக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கொடுத்து 9 மாதத்திலேயே பின் பறிக்கப்பட்டது


கடந்த 2001ம் ஆண்டிலும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகநாதன். அப்போது அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 9 மாதத்திலேயே சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2006 – ம் ஆண்டுவரை எம்எல்ஏவாகவே பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.

வியாழன், 3 நவம்பர், 2011

ஸ்ரீவை., எல்லைக்குட்பட்ட பகுதியில் பன்றி, நாய்களை ஒழிக்க பஞ்., கூட்டத்தில் விவாதம்

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ், எல்லைக்குள் பன்றிகள், நாய்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என பஞ்., கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்., உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு டவுன் பஞ்.,தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது

பிச்சை: ஸ்ரீவைகுண்டம் மின் சந்தை வளாகத்தில் அதிகமாக மழைநீர் தேங்குவதால் அந்தபகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது.

தலைவர்: மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து பஞ்.,நிர்வாகம் உடனடியாக தீர்வு காணப்படும்.

பொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் டவுன்பஞ்.,சிற்கு புதிய டிராக்டர் ஒன்று தேவை. தற்போது உள்ள டிராக்டர் சரிவர இயங்கவில்லை. அதனை வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

பெருமாள்: டிராக்டர் வாங்கும் போது அதோடு சேர்த்து மண் அள்ளும் இயந்திரமும் வாங்கவேண்டும்.

தலைவர்: தற்போது உள்ள டிராக்டர் சரி இல்லை எனில் கண்டிப்பாக மக்கள் சேவைக்கு புதிய டிராக்டர் வாங்க ஆவன செய்யப்படும்.

பொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ரதவீதிகளில் திருவிழா காலங்களில் ஆடு வெட்டுவதை தடை செய்யவேண்டும்

தலைவர்: அதனை நகர சுகாதாரம் கருதி சந்தை வளாகத்தில் மாற்ற உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும்

பெரியார் செல்வம்: நகர பகுதிக்குள் நாய், பன்றிகள் தொல்லை அதிகமானதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

தலைவர்: ஓரு மாதத்திற்குள் கால அவகாசம் கொடுத்து அதனை முற்றிலுமாக ஒழித்து சுத்தமான ஸ்ரீவை.,யை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பால்ராஜ்: குடிநீர், சுகாதாரம் போன்ற பெரிய பிரச்னைகள் இருக்கும்போது பிறர் வார்டுகளில் பிரச்னையை பற்றி உறுப்பினர்கள் பேசலாமா?

தலைவர்: நாம் 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் ஸ்ரீவைகுண்டத்தை வளம்பெற செய்யமுடியும். நான் உட்பட யாரும் எந்தவிதமான கமிஷன் ஏதும் வாங்காமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

எழுத்தர் தாமரை செல்வன் நன்றி கூறினார்.

செய்தி : தினமலர்

புதன், 2 நவம்பர், 2011

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவராக பதவி ஏற்றிருக்கும் பி.அருணாசலம் தலைமையில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடங்கியது.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் பி.அருணாசலம் கூறியதாவது:

அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளால் தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது.எனவே இந்த மழைக்காலத்தில் அமலைச் செடிகளை பொதுமக்கள் துணையுடன் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்

செய்தி : தினமணி

ஸ்ரீவைகுண்டத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை

ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு மற்றும் காலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருத்துவர் காலனி, கணியான் காலனி, கருணாநிதிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் இருந்து வெளியில் எடுக்கமுடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர பஞ்சாயத்து தலைவர் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் பள்ளமான பகுதிகளில் மண் அடித்து மேடாக்கவும் ரோடுகளில் தண்ணீர் தேங்கி பள்ளமாக உள்ள பகுதிகளை மேடாக்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், மழைக்காலமாக இருப்பதால் தெருக்களில் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் கூறினார்

தகவல் : தூத்துக்குடி இணைதளம்

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்வு

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அ.முத்துலட்சுமி, துணைத் தலைவராக சு.வசந்தா ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்தம் உள்ள 14 வார்டு உறுப்பினர்களில், அதிமுக சார்பில் 10 பேரும், திமுக சார்பில் ஒருவரும், தேமுதிக சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றிபெற்றனர்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் தேர்தல், தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 13-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.முத்துலட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் 9-வது வார்டு உறுப்பினர் சு. வசந்தாவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றியச் செயலர் வெ.ஆறுமுகநயினார், பெருங்குளம் நகரச் செயலர் செல்லத்துரை, திருப்பாற்கடல், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் வாழ்த்து தெரிவித்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலர் மணி முன்னிலையில் நடந்தது. மொத்தம் 18 வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மு.மாரிமுத்து மற்றும் தி.மு.க. சார்பில் பெ.தங்கவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாரிமுத்து 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெ.தங்கவேல் தோல்வியடைந்தார்.

வெற்றி பெற்ற மு.மாரிமுத்துவுக்கு பேரூராட்சித் தலைவர் பி. அருணாசலம், நகர அதிமுக செயலர் பால்துரை, ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

வியாழன், 27 அக்டோபர், 2011

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு


ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

பேரூராட்சி மன்ற பதவியேற்பு விழாவையொட்டி பேரூராட்சி அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பகல் 12 மணிக்கு மேல் பதிவியேற்ப்பு விழா தொடங்கியது.

மேளதாளங்களுடன், வாண வேடிக்கைகள் முழங்க முதலில் பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலத்துக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

பின்னர் தொடர்ந்து உறுப்பினர்கள் தே.பெருமாள் (1வது வார்டு), ம.ராமலெட்சுமி (2வது வார்டு), செய்யது காதர் பாத்திமா (3 வது வார்டு), மு.பராசக்தி (4 வது வார்டு), கு.பிச்சை (5 வது வார்டு), பி.ரீனா (6 வது வார்டு), க.பாமா (7 வது வார்டு), சு.பால்ராஜ் (8 வது வார்டு), பெ.தங்கவேல் (9 வது வார்டு), எம்.எஸ்.ராஜா (10 வது வார்டு), கா.தாமோதரன் (11 வது வார்டு), கே.பாலம்மாள் (12 வது வார்டு), சு.பெருமாள் (13 வது வார்டு), எஸ்.நிலமுடையான் (14 வது வார்டு), ஆர்.அமுதா (15 வது வார்டு), ஜி.பெரியார்செல்வம் ( 16 வது வார்டு), எம்.பொன்பாண்டி (17 வது வார்டு), மு.மாரிமுத்து (18 வது வார்டு) ஆகியோருக்கு பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலம் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முடிவில் புதிய தலைவர் பி.அருணாசலம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சனி, 22 அக்டோபர், 2011

ஸ்ரீவை, டவுன் பஞ்,தேர்தலில் அதிமுக முதன்முறையாக தலைவர் பதவியை கைப்பற்றியது

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று சாயர்புரம் போப் கல்லூரியில் நடந்தது.

இதில் அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3848 வாக்குகள் பெற்று 1959 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.


தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பெற்ற வாக்குகள் விபரம் :

அதிமுக வேட்பாளர் அருணாசலம் 3848 வாக்குகள்.

திமுக வேட்பாளர் பெருமாள் 1890 வாக்குகள்.

காங் வேட்பாளர் ஆறுமுகம் 232 வாக்குகள்.

சி.பி.எம் வேட்பாளர் கந்தசாமி 194 வாக்குகள்.

பாஜக வேட்பாளர் பசும்பொன் ராஜா 123 வாக்குகள்.

பாமக வேட்பாளர் அங்கப்பன் 112 வாக்குகள்.

சுயேட்சை வேட்பாளர் சிவசுப்பு 1099 வாக்குகள்.

சுயேட்சை வேட்பாளர் சக்திவேல் 109 வாக்குகள்.


வார்டு உறுப்பினர்களின் வெற்றி பெற்றவர்கள் விபரம்

1வது வார்டு பெருமாள் (சுயே) 342 வாக்குகள்.

2வது வார்டு ராமலெட்சுமி (திமுக) 237 வாக்குகள்.

3வது வார்டு செய்யது காதர் பாத்திமா (அதிமுக) 174 வாக்குகள்.

4வது வார்டு பராசக்தி (திமுக) 130 வாக்குகள்.

5வது வார்டு பிச்சை (அதிமுக) 294 வாக்குகள்.

6வது வார்டு ரீனா (சுயே) 185 வாக்குகள்.

7வது வார்டு பாமா (சுயே) 139 வாக்குகள்.

8வது வார்டு பால்ராஜ் (திமுக) 290 வாக்குகள்.

9வது வார்டு தங்கவேல் (திமுக) 203 வாக்குகள்.

10வது வார்டு ராஜா (சுயே) 338 வாக்குகள்.

11வது வார்டு தாமோதிரன் (அதிமுக)போட்டியின்றி தேர்வு.

12வது வார்டு உறுப்பினராக பாலம்மாள் (காங்)போட்டியின்றி தேர்வு.

13வது வார்டு பெருமாள் (தேமுதிக) 141 வாக்குகள்.

14வது வார்டு நிலமுடையான் (திமுக) 278 வாக்குகள்.

15வது வார்டு அமுதா (அதிமுக) 247 வாக்குகள்.

16வது வார்டு பெரியார் செல்வம் (தேமுதிக) 268 வாக்குகள்.

17வது வார்டு பொன்பாண்டி (திமுக) 173 வாக்குகள்.

18வது வார்டு மாரிமுத்து (அதிமுக) 219 வாக்குகள்.

ஸ்ரீவை, டவுன் பஞ்சாயத்து தேர்தலில் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் அமோக வெற்றி

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் 3வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட, நமது தெரு சார்த்த ஜனாப் ஜோய்ஸ் முகைதீன் அவர்களின் தாயார் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் 174 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்று உள்ளார்.

அவர்களுக்கு ஸ்ரீவை மக்கள் நல வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. மேலும் சிறப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக ஆமீன்.

வியாழன், 13 அக்டோபர், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளக்கால மீட்ப்பு பணி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை


ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் வெள்ளக்கால மீட்ப்பு பணி குறித்து தாமிரபரணி ஆற்றில் ஒத்திகை நடந்தது.

தீயணைப்பு -மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை காரனமாக ஒத்திகை பயிற்ச்சி நடந்தது. பயிற்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் மனோகரன் தலைமைதாங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனப்படித் துறையில் நடந்த மீட்ப்பு பணி ஒத்திகையில் உதவி மாவட்ட அலுவளர் லோகிதாஸ் தூத்துக்குடி நிலைய அலுவளர் ராஜி மற்று தூத்துக்குடி நிலைய கமோண்டோ வீரர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் நிலைய பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ரப்பர்படகு மற்றும் விசை படகு, மண்ணெண்ணை பேரல் படகு தயார் செய்து அதில் பொது மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்ப்பது எவ்வாறு என்பதை தத்துருவமாக செய்து காண்பித்தனர்.

ஒத்திகையில் குமரகுருபரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி : தூத்துக்குடி வெப்சைட்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன் போட்டியிடுகிறார்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாற்றுத் திறனாளி அங்கப்பன் போட்டியிடுகிறார். பாமக சார்பில் இவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் மூன்று சக்கர வாகனத்தில் சென்று மக்கள் கூடும் இடங்களில் டீ, வடை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகன், மகள்களை படிக்க வைக்கிறார்.

பாமக நகரத் தலைவரான இவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறியதாவது:

ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவை இடைத்தேர்தலின்போது சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தேன். மனு முழுவதுமாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடுகிறேன். தினமும் காலைமுதல் மாலை வரை நீதிமன்ற வாசலிலும், ஆழ்வார்தோப்பு பகுதிகளிலுள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் டீ, வடை விற்பனை செய்வேன். மாலையில் இருந்து இரவு வரை வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்படுகிறார்கள். நான் வெற்றி பெற்றால் குடிநீர் பிரச்னையை தீர்பேன் என்றார் அவர்.

செய்தி : தினமணி

வியாழன், 1 செப்டம்பர், 2011

ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணிக்கும் அரசு பஸ் : கலெக்டரிடம் புகார்

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து செல்வதால் மக்கள் பரிதவித்து கொண்டிருப்பதாக கலெக்டரிடம் கிராம மக்கள் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் ஆஷீஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் முக்கியமான ஊராகும். இந்த ஊரில் உள்ள மக்கள் அரசு, தனியார் பணி நிமித்தமாக நெல்லைக்கு செல்கின்றனர். நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி, கலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்கு படிக்க செல்கின்றனர்.

இதே போல் இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பணிக்கு ஒன்று நெல்லைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் தூத்துக்குடிக்கு வர வேண்டும். திருச்செந்தூரில் இருந்து வரும் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் அப்படியே மெயின் ரோட்டில் சென்று விடுகின்றன.

இதனால் இந்த பகுதி மக்கள் தினமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் இயங்கும் அரசு பஸ்களை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்வதற்கு உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதன், 24 ஆகஸ்ட், 2011

ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

இந்த அணைப் பகுதியிலிருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

இப்போது, ரூ.28 கோடி திட்ட மதிப்பீட்டில் ராட்சத குழாய்கள் பதித்து, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றுக்குள் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறையின்போது விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தது போகத்தான் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென விதிமுறை உள்ளது. ஆனால், அதையும் மீறி தூத்துக்குடியில் உள்ள 8 தொழிற்சாலைகளுக்கு அளவுக்கு அதிகமாக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம், வடகால் பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அணைக்கட்டில் உள்ள அமலைச் செடிகளை அகற்றவும், ஆற்றைத் தூர்வாரவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் வசந்தா, ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்காதரன், பிரிவு அலுவலர் வினோத்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஸ்ரீவையில் கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.

ஸ்ரீவைகுண்டத்தில் கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.

ஸ்ரீவைகுண்டம் பழைய பாலத்தை அகலப்படுத்தும் பணி 2009-ல் தொடங்கியது. 2010-ம் ஆண்டு ஜூலைக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டது.ஆனால் இன்னும் அப்பணி முடிவடையவில்லை.

ஸ்ரீவைகுண்டம் வரும் ஆழ்வார்தோப்பு இணைப்புச் சாலையில் பாலத்தின் உயரம் இருபுறங்களிலும் சுமார் 20 அடி உள்ளது. ஆனால் கைப்பிடிச் சுவர் கட்டப்படவில்லை.

பாதுகாப்பு இல்லாத இப்பகுதியில்தான் பொதுமக்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் செ. மாணிக்ககுமார் தனது நண்பர்களுடன் புதிய பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தாராம்.அப்போது தவறி கீழே விழுந்ததில் அவர் இறந்தார்.

சம்பவ இடத்தை வட்டாட்சியர் வசந்தா பார்வையிட்டார்.இது குறித்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு

சமூக சேவகர் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு நடத்த அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கந்தசிவசுப்பு, துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கூறி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நாளை (24ம் தேதி) ஒரு நாள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பசுப்பொன் ரத்ததானக்கழக நிறுவனர் ராஜா, வியாபாரிகள் சங்க செயலாளர் ஐசக், இணை செயலாளர் முத்துமாலை, பொருளாளர் லெட்சுமணன் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

சனி, 30 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தக் கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் தொடக் கக்கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் வீரமுர்த்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத் தில் தலைமை ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ், ஆண்ட்ரூ குருஸ், தேவ ராஜன், மாவட்ட செயலாளர் சம்பத் சாமுவேல், வட்டார பொருளாளர் பாப்ஹயஸ், ஆகியோர் ஆர்ப்பாட்டத் தின் நோக்கம் பற்றி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் கல்வியை நடப்பு கல் வியாண்டில் அமல்படுத்திட வேண்டும் எனவும், தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிடவும், ஆறாவது ஊதியகுழுவின் மாற்ற குறைபாடுகளை களைந்திட வேண்டும் எனவும், ஒளிவு மறைவற்ற ஆசிரியர் கலைந்தாய்வு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் பணிக் கால அடிப்படையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

செய்தி : தினமலர்

புதன், 27 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு


ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், பார்வையிட்டார். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன அணைக்கட்டுக்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவசாயிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் கனடியன் அணைக்கட்டில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதி வரை உள்ள பாசன பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம் பார்வையிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் வந்த அமைச்சருக்கு தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் உதயசூரியன், பேய்க்குளம் விவசாய சங்க பொருளாளர் குணசேகரன், ஒன்றிய அதிமுக. செயலாளர் ஆறுமுகநயினார், நகர செயலாளர் பால்துரை, பெருங்குளம் நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் உள்ள 18 மணல்வாரிகளிலும் உள்ள சர்ட்டர்கள் உடைந்து திறக்க முடியாமல் பயனற்றுப்போய் கிடப்பதை பார்வையிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை அமைச்சர் பார்வையிட்டார். வடகால் வாய்க்காலை பார்வையிட்டபோது, வடகால் வாய்க்கால் தடுப்புச் சுவர்கள் இடிந்து கிடப்பதையும், மதகு பகுதியில் மணல் திட்டுக்கள் ஆக்கிரமித்திருப்பதையும் பார்வையிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், இதையெல்லாம் பராமரிப்பது கிடையாதா என்ன இப்படி கிடக்கிறது, மீண்டும் 10 நாட்கள் கழித்து வருவேன் அப்போது அனைத்து குறைகளும் சரிசெய்யப்பட்டிருக்கவேண்டும் என்று அதிகாரிகளை எச்சரித்தார்.

வடகால் வாய்க்காலில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு இருவப்பபுரத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ராட்ஷச இயந்திரங்கள் மூலம் வடகால் வாய்க்கால் மூலம் எடுக்கப்பட்டு வந்த 20 எம்.ஜி.டி. தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், தாமிரபரணி அணைக்கட்டு, வடகால், தென்கால் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். ராட்ஷச இயந்திரங்கள் மூலம் தண்ணீர் எடுப்பதால், அணைக்கட்டுப்பகுதியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே அந்த திட்டத்தை கைவிட்டு வழக்கம் போல் வடகால் வாய்க்கால் மூலம் 20 எம்.ஜி.டி. தண்ணீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன் அமைச்சரிடம் கூறினார். அப்போது விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் அந்த கோரிக்கையை தமிழக முதல்வருக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, விவசாயிகள் துயர் துடைக்கவேண்டும் என்று அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கைவைத்தனர்.

அப்போது விவசாயிகளிடம், தொழிற்சாலைகளின் நலனை விட விவசாயிகளின் நலனையே பெரிதாக நினைப்பவர் ஜெயலலிதா, எனவே விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கூறினார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலி-ங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழக முதல் அமைச்சர் என்னை அழைத்து, தாமிரபரணி பாசனத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக, விவசாயிகளிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளது. எனவே தாமிரபரணி பாசன அணைக்கட்டு மற்றும் பாசன பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி விவசாயிகளின் குறைகளை கேட்டு வாருங்கள் என்று அனுப்பியுள்ளார்.

ஜெயலலிதா உத்தரவு படி நேற்று தாமிரபரணி பாசன கனடியன் அணைக்கட்டுப்பகுதியில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிவரை பார்வையிட்டுள்ளேன். தாமிரபரணி பாசன விவசாயிகள் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், பாசன கால்வாய்கள், குளங்களை தூர்வாரி மராமத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னடியன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் விரைவில் வந்து சேரும். அணைக்கட்டில் பழுதாகியுள்ள மதகுகள், ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகள், ஆற்றை தூர்வாருவது மற்றும் விவசாயிகள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு பேட்டியில் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை எஞ்சினியர் சம்பத்குமார், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கால்ராஜ், செயற்பொறியாளர் காமராஜ், பிரிவு அலுவலர்கள் ரகுநாதன், வினோத்குமார், தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் டி.உதயசூரியன், தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் கணபதி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி : தூத்துக்குடி வெப்சைட்

ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி


ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்கோயில் திருவிழா கடந்த 16 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக முதல்நாள் காலை 7மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுக்காகவும் பங்குதந்தை பெஞ்சமின்டிசூசா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பின்னர் மாலை 6.30மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடந்தது. கடந்த 16 ந் தேதி தொடங்கி 25 ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. தேர்பவனியில் கலந்துகொள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே வந்து கோயிலில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக திருவிழாவில் கடலோர மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.

இன்று காலையில் கோயிலின் முன் புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளினர். பக்தர்கள் நேர்ச்சையாக மாலை, எலுமிச்சை மாலை ஆகியவற்றை செலுத்தினர். புனித சந்தியாகப்பருக்கும், மாதாவுக்கும் பக்தர்கள் நேர்ச்சையாக வழங்கிய மாலைகள் அணியப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டது.

தேருக்கும் சப்பரத்துக்கும் முன் மிக்கேல் அதிதூதர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி முன்னால் சென்றார். அப்போது பாடல் குழுவினர் பாடல்கள் பாடிக்கொண்டு முன் செல்ல பக்தர்களின் கரகோசத்துடன் கோயில் முன்பிருந்து காலை 10.45 மணிக்கு புனித சந்தியாகப்பர் சப்பரத்தில் புறப்பட்டார். தொடர்ந்து மாதா தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. தேரோட்டத்தில கலந்துகொண்ட பக்தர்கள் உப்பு, மிளகு, பூ ஆகியவற்றை தேரில் தூவி வழிபட்டனர்.

பின்னர் பக்தர்கள் புனித சந்தியாகப்பர் கோவிலில் சென்று, புனித சந்தியாகப்பருக்கு மாலை மற்றும் மெழுகுவர்த்தி நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு கோயிலில் இருந்து வெள்ளை நூல் வழங்கப்பட்டது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் கையில் வெள்ளை நூல் அணிந்து ஆசி பெற்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ கோவிலாக புனித சந்தியாகப்பர் கோவில் விளங்குகிறது. எனவே 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விதவிதமான ராட்டினங்கள், சர்க்கஸ், விசித்திர காட்சி அரங்கங்கள், குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டுகள், விதவிதமான விளையாட்டு பொருட்கள் கடைகள், மிட்டாய் கடைகள் என்று 10 நாட்களும் குருசுகோவில் களைகட்டியது.

முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து மதியம் 2.15 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தேர்நிலையம் வந்ததும் திருப்பலி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு நன்றி திருப்பலி நடக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வீரராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்காதர், சண்முகவடிவு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் அலெக்சாண்டர், டிக்சன், ஜெயக்குமார், ரஞ்சித்குமார், பெஞ்சமின், கிஷோக்கிராசியுள், லூசன், செல்வன், பென்சிகர், இருதயராஜா, சூசைராஜ், ஸ்டார்வின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குருசுகோவில் பங்குதந்தை ஜெயகர் மற்றும் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்திருந்தனர்.

நன்றி : தூத்துக்குடி வெப்சைட்

வியாழன், 21 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் கே ஜி எஸ் கல்லூரியில் விழிப்புணர்வு வார விழா

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

காந்திய சிந்தனை பண்பாட்டு மையம் சார்பில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய விழாவில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகம் வகுப்பறைகள், அலுவலகம், நூலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களையும், குப்பைகளையும் அகற்றி தூய்மைப்படுத்தினர்.

இறுதி நாள் நிகழ்ச்சிக்கு,கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்து பேசினார். விலங்கியல் துறைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ஜான் டீ பிரிட்டோ பேசினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காந்தியசிந்தனை பண்பாட்டு மைய இயக்குநர் போஸ் வரவேற்றார். பொருளியல் துறை பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.

நன்றி : தினமணி

LinkWithin

Blog Widget by LinkWithin