வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 மார்ச், 2011

ஜூன் 30ம் தேதி முதல் 25 பைசா நாணயம் செல்லாது : ரிசர்வ் வங்கி


நம்நாட்டில் பயன்படுத்தப்பட்டு 25 பைசா நாணயம் ஜூன் 30ம் தேதி முதல் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கோ.ரா.ஆனந்தா நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் 25 பைசா மற்றும் அதற்கு குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றி விட அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய நாணயச் சட்டம் 1906ன் கீழ், வரும் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கிகளிலும் மாற்றிக் கொள்ள முடியாது.

எனவே, ஜூன் 29ம் தேதிக்குள் சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள், ரிசர்வ் வங்கியின் அனைத்து வழங்கல் அலுவலகங்களிலும், பொதுமக்கள் இந்த நாணயங்களை மாற்றிக் கொண்டு அதற்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல் : தமிழ் முரசு

திங்கள், 2 நவம்பர், 2009

வங்கி எழுத்தர் பணி: பெண்களுக்கு இலவசப் பயிற்சி


பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர்கள் பணிக்கான தேர்வு குறித்த மூன்று நாள் இலவசப் பயிற்சி பெண்களுக்கு வியாழக்கிழமை (நவ. 5) முதல் தொடங்கவுள்ளது.

11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்கள் உள்ள இத்தேர்வு நவம்பர் 8 - ம் தேதி நடைபெறவுள்ளது.

"சக்ஸஸ் ஸ்கூல் ஆஃப் பாங்கிங்' என்ற நிறுவனம் இந்த இலவசப் பயிற்சியை நடத்துகிறது.

இதில் வேத கணித நுட்பங்கள் மூலம் கணிதக் கேள்விகளுக்கு துரித மற்றும் எளிதான தீர்வுகள், ஆங்கில இலக்கணம் உள்ளிட்டவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். சென்னை எழும்பூரில் உள்ள உலகப் பல்கலைக்கழக சேவை மையத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் தேர்வு நுழைவுச் சீட்டு நகலுடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 92822 33333, 93848 44405

சனி, 17 அக்டோபர், 2009

ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்தாலும் மாற்றலாம் : விதிமுறைகளை எளிதாக்கி ஆர்.பி.ஐ., அறிவிப்பு


ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்ட விதிமுறைகள், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்திருந்தாலும், அது அழுக்கடைந்த நோட்டுகளாக கருதி, வேறு ரூபாய் நோட்டு மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழுக்கான மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள், ரிசர்வ் வங்கியால் 1975ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட இவ்விதிமுறைகள், பொதுமக்களின் வசதிக்காக தற்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் துறையின் துணைப் பொது மேலாளர் ரங்கநாதன் கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் பகுதியில் கிழிந்திருந்தால், முன்பு அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படும். இவற்றை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப் பட்ட, பண கருவூலங்கள் உள்ள வங்கிகளின் கிளைகளில் மட்டும் தான் மாற்ற முடியும்.தற்போதைய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகளின் எந்த பகுதியிலும் (வரிசை எண் பகுதி உட்பட) இரு துண்டுகளாக கிழிந்திருக்கும் பட்சத்தில், அவை அழுக்கடைந்த நோட்டுகளாகவே கருதப்படும்.

இவற்றை இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும், அவற்றின் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, புதிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டில், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டு 50 சதவீத பரப்பளவிற்கு மேல் இருந்தால், அதற்கு முழுத்தொகை வழங்கப்படும்.இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு ஒரு ரூபாய்க்கு 31 ச.செமீ, இரண்டு ரூபாய்க்கு 34 ச.செ.மீ., ஐந்து ரூபாய்க்கு 38 ச.செ.மீ., 10 ரூபாய்க்கு 44 ச.செ.மீ., மற்றும் 20 ரூபாய்க்கு 47 ச.செ.மீ., ஆகவும் இருக்க வேண்டும்.கிழிந்த நோட்டின்,கிழியாத மிகப்பெரிய துண்டின் பரப்பளவு 50 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அதன் மதிப்பு முழுவதும் நிராகரிக்கப்படும்.

பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின் (50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை), கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 65 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அதற்கு முழுதொகை தரப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 70 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 75 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 80 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 84 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 40 சதவீதத்திற்கு மேலும், 65 சதவீதம் வரையிலும் இருந்தால், அவற்றுக்கு பாதி தொகை வழங்கப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 43 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 46 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 49 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 52 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.கிழியாத மிகப்பெரிய ரூபாய் துண்டின் பரப்பளவு 40 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அவற்றின் மதிப்பு முழுவதுமாக நிராகரிக்கப்படும்.

இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிலும், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இதர வணிக வங்கிகளின் 303 பண கருவூலங்கள் உள்ள கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்

செய்தி : தினமலர்

ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்தாலும் மாற்றலாம் : விதிமுறைகளை எளிதாக்கி ஆர்.பி.ஐ., அறிவிப்பு

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, ரிசர்வ் வங்கியால் திருத்தப்பட்ட விதிமுறைகள், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அமலாக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகள் எந்தப் பகுதியில் கிழிந்திருந்தாலும், அது அழுக்கடைந்த நோட்டுகளாக கருதி, வேறு ரூபாய் நோட்டு மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழுக்கான மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள், ரிசர்வ் வங்கியால் 1975ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 1985ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட இவ்விதிமுறைகள், பொதுமக்களின் வசதிக்காக தற்போது மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கும் துறையின் துணைப் பொது மேலாளர் ரங்கநாதன் கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் பகுதியில் கிழிந்திருந்தால், முன்பு அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படும். இவற்றை ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப் பட்ட, பண கருவூலங்கள் உள்ள வங்கிகளின் கிளைகளில் மட்டும் தான் மாற்ற முடியும்.தற்போதைய விதிமுறையின்படி, ரூபாய் நோட்டுகளின் எந்த பகுதியிலும் (வரிசை எண் பகுதி உட்பட) இரு துண்டுகளாக கிழிந்திருக்கும் பட்சத்தில், அவை அழுக்கடைந்த நோட்டுகளாகவே கருதப்படும். இவற்றை இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளிலும், அவற்றின் கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம்.

இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, புதிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டில், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டு 50 சதவீத பரப்பளவிற்கு மேல் இருந்தால், அதற்கு முழுத்தொகை வழங்கப்படும்.இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு ஒரு ரூபாய்க்கு 31 ச.செமீ, இரண்டு ரூபாய்க்கு 34 ச.செ.மீ., ஐந்து ரூபாய்க்கு 38 ச.செ.மீ., 10 ரூபாய்க்கு 44 ச.செ.மீ., மற்றும் 20 ரூபாய்க்கு 47 ச.செ.மீ., ஆகவும் இருக்க வேண்டும்.கிழிந்த நோட்டின்,கிழியாத மிகப்பெரிய துண்டின் பரப்பளவு 50 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அதன் மதிப்பு முழுவதும் நிராகரிக்கப்படும்.பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின் (50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை), கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 65 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அதற்கு முழுதொகை தரப்படும்.

இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 70 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 75 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 80 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 84 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.பல துண்டுகளாக கிழிந்திருக்கும் ரூபாய் நோட்டின், கிழியாத மிகப்பெரிய ஒரு துண்டின் பரப்பளவு 40 சதவீதத்திற்கு மேலும், 65 சதவீதம் வரையிலும் இருந்தால், அவற்றுக்கு பாதி தொகை வழங்கப்படும். இதற்கு அந்த ரூபாய் துண்டின் பரப்பளவு 50 ரூபாய்க்கு 43 ச.செ.மீ., 100 ரூபாய்க்கு 46 ச.செ.மீ., 500 ரூபாய்க்கு 49 ச.செ.மீ., மற்றும் 1,000 ரூபாய்க்கு 52 ச.செ.மீ., ஆகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

கிழியாத மிகப்பெரிய ரூபாய் துண்டின் பரப்பளவு 40 சதவீதம் மற்றும் அதற்கு கீழும் இருந்தால், அவற்றின் மதிப்பு முழுவதுமாக நிராகரிக்கப்படும். இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிலும், ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இதர வணிக வங்கிகளின் 303 பண கருவூலங்கள் உள்ள கிளைகளிலும் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.

வியாழன், 15 அக்டோபர், 2009

இன்று முதல் ஏ.டி.எம்.-களில் பணம் எடுக்க கட்டுப்பாடு


இன்று முதல் ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே வேறு வங்கி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியும் என்றும் அதற்கு மேல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு தடவைக்கும் சேவை வரி விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், அக்டோபர் 15ஆம் தேதி முதல், ஒரு மாதத்தில் 5 முறை மட்டுமே வேறு வங்கி ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுக்கப்படும் ஒவ்வொரு தடவைக்கும் சேவை வரி விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி ஒரு தடவைக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல், மற்ற வங்கி ஏ.டி.எம்.ல் பணம் எடுக்க முடியாது. அதேநேரத்தில், வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

SBI ஏடிஎம்கள் சேட்டிலைட் மூலம் ஒருங்கிணைப்பு!


பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தானியங்கி பணப்பட்டு வாடா மையங்கள் (ஏடிஎம்) அனைத்தும் செயற்கைக்கோள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இதற்கான பொறுப்பு ஹியூஸ் நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்கள் உள்ள அனைத்து மையங்களிலும் 2,880 வி-சாட் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வங்கிகள் அல்லாத பிற இடங்களில் உள்ள ஏடிஎம்களை ஒருங்கிணைக்க முடியும்.

இந்தப் பணிக்கான ஒப்பந்த மதிப்பு ரூ. 22.5 கோடியாகும். ஏடிஎம்களை ஒருங்கிணைப்பது, செயற்கைக்கோள் தொடர்பை நிர்வகிப்பது ஆகியன இதில் அடங்கும்.

வங்கியின் மத்திய தகவல் தொகுப்புடன் இந்த வி-சாட் தொடர்பு இணைக்கப்பட்டிருக்கும். இந்த தகவல் தொகுப்பு மையம் சுனாமி, பெரும்மழை போன்ற பேரழிவு இடர்பாடுகளின்போதும்கூட பாதிப்புக்குள்ளாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 10 செப்டம்பர், 2009

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம்


பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள காகிதத்தால் ஆன நோட்டுகளை விட 4 மடங்கு அதிக காலம் உழைக்கக் கூடியது பிளாஸ்டிக் நோட்டுகள்.

பாலிமரால் ஆன நோட்டுகளில் கள்ள நோட்டுகளை அச்சிடுவது மிகவும் கடினம். எனவே பாதுகாப்புத் தன்மை மற்றும் நீண்ட காலம் உழைக்கக் கூடியது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதால் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை படிப்படியாக புழக்கத்தில் கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக 100 கோடி எண்ணிக்கையில் 10 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கென சர்வதேச அளவிலான டெண்டரை ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை முதலில் அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியாதான். தற்போது நியூஸிலாந்து, பப்புவா நியூ கினியா, ருமேனியா, பெர்முடா, புருனே, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சிகள்தான் புழக்கத்தில் உள்ளன. தற்போது இந்தியாவும் இந்த நடைமுறையைப் பின்பற்ற உள்ளது.

சனி, 29 ஆகஸ்ட், 2009

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் கேட்ட தொகைக்கு பாதி பணம்:


திருநெல்வேலி சந்திப்பு பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர் இருவருக்கு பாதித் தொகைக்கான பணம் மட்டுமே கிடைத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சி.என். கிராமத்தைச் சேர்ந்த ஆர். இசக்கி என்பவர் பணம் எடுக்க வந்தார்.அவர், ரூ.7 ஆயிரம் எடுக்க இயந்திரத்தை இயக்கினார். அவருக்கு கையில் கிடைத்தது ரூ. 3 ஆயிரம் மட்டும்தான். ஆனால், ரூ. 7 ஆயிரம் எடுக்கப்பட்டதாக ரசீது வந்தது. அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் சந்திரராஜ் நின்றார். அவருக்கு ரூ. 30 ஆயிரம் தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் ரூ. 30 ஆயிரம் எடுக்கமுடியாது என்பதால், அவர் முதலில் ரூ. 15 ஆயிரம் எடுக்க முயன்றார். பணம் கிடைத்தது. அதை சரிபார்க்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

இரண்டாவதாக ரூ. 15 ஆயிரம் எடுக்க முயன்றார். இரண்டாவது முறையாக கிடைத்த பணத்தையும் முதலில் எடுத்த பணத்தையும் சேர்த்து எண்ணினார். ரூ. 30 ஆயிரத்திற்குப் பதிலாக ரூ. 17,500 மட்டுமே இருந்ததைத் அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், தலா ரூ.15ஆயிரம் எடுக்கப்பட்டதாக ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அங்கிருந்த காவலாளியிடம் இருவரும் புகார் தெரிவித்தனர். இந்த தகவல், வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும், ஏடிஎம் மையம் தாற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர், வங்கி தலைமை மேலாளர் கோமதிநாயகம் கூறியதாவது:
வாடிக்கையாளர் இருவருக்கு பணம் குறைவாக கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மனு எழுதிக் கொடுத்து மீதிப் பணத்தை வங்கியில் பெற்றுச் கொள்ளலாம்.
பணம் எடுக்கும்போது மின்தடை ஏற்பட்டு இருந்தால் இதுபோன்று சம்பவங்கள் நேரிட வாய்ப்பு உள்ளது.
ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது ஏற்படும் சிறிய பழுதுகள் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்

சனி, 22 ஆகஸ்ட், 2009

இதர வங்கி ஏடிஎம்-களை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம்


இதர வங்கி ஏடிஎம்-களை ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் இனி ரூ. 20 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இது வரும் அக்டோபர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருகிறது.

தற்போது இதர வங்கி ஏடிஎம்-களில் பணம் எடுக்க கட்டணம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சனி, 15 ஆகஸ்ட், 2009

ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு ரகசியம் கசிவு-சிபிஐ


2005ம் ஆண்டு அச்சிடப்பட்ட நோட்டுகளின் வடிவமைப்பு ரகசியம் அடங்கிய 'டெம்ப்ளேட்' (template) வெளியில் கசிந்துவிட்டதால் தான் 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகரித்துவிட்டதாக என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு அதிகரித்து வருவது குறித்து சிபிஐ, வருவாய் புலனாய்வுப் பிரிவினர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மத்திய தடயவியல் ஆய்வக அதிகாரிகள் அடங்கிய குழு தீவிர விசாரணை நடத்தியது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும்போது அதில் பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்படும் சங்கேத குறியீடு, வடிவமைப்பு ரகசியங்கள் அடங்கிய 'டெம்பிளேட்' கள்ள நோட்டு அச்சிடும் கும்பல்களின் கையில் எப்படியோ போய்ச் சேர்ந்துள்ளது.

இதைக் கொண்டு தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இந்தக் கும்பல்கள் அச்சிட்டு வெளியிட ஆரம்பித்துள்ளன.

கள்ள நோட்டுகள் அச்சடிப்போருக்கு அது எந்த காகிதத்தில் அச்சடிக்கப்படுகிறது, அதற்கு எந்த வகை மை பயன்படுத்தப்படுகிறது, அது எங்கு கிடைக்கும், நோட்டுகளின் மையத்தில் உள்ள சில்வர் பார், வாட்டர் மார்க் வடிவமைபபு போன்ற தகவல்கள் எளிதாகக் கிடைத்து வருகின்றன என்றும் சிபிஐ கூறியுள்ளது.

மேலும் எந்த வகையான மையை, எந்தெந்த அளவில் பயன்படுத்தினால் உண்மையான நோட்டுகளுக்கு நிகராக தன்மையைக் கொண்டு வர முடியும் போன்ற விவரங்களையும் இந்தக் கும்பல்கள் அறிந்து வைத்துள்ளன என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த ரகசியம் வெளியில் கசிந்ததில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவின் கைவரிசை இருக்கக் கூடும் என்று சந்தேகி்க்கப்படுகிறது.

நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் வரை ரூ. 1,69,000 கோடி அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

நெல்லை-தூத்துக்குடியில் 4 ஆயிரம் பாங்கி ஊழியர்கள் “ஸ்டிரைக்” அரசுடமை வங்கிகள் மூடப்பட்டன



நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் 4 ஆயிரம் பாங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் கில் ஈடுபட்டதால் அரசுடமை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டன. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊதிய உயர்வு மற்றம் பென்சன் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 200 அரசுடமை வங்கிகள் செயல்படாமல் மூடப்பட்டன. இதில் வேலை பார்த்த சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று பணிக்கு வரவில்லை.

இதனால் வங்கிகளில் காசோலை, வர்த்தகம், டிமாண்ட் டிராப்ட், போன்ற பண மாற்றம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகை கடன்களும் வழங்கப்படாத தால் ஏராளமான பொது மக்கள் பாதிப்படைந்தனர்.

ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்ககடும் கூட்டம் அலை மோதியது. இதனால் பல ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. ஆனால் தனியார் பாங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. தனியார் பாங்கி ஏ.டி.எம். மையம் மூலம் பலர் பணம் எடுத்தனர். இதனால் தனியார் பாங்கி ஏ.டி.எம் மையங்களிலும் இன்று கூட்டம் அலை மோதியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூரில் வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தூத்துக்குடி யூகோ வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, நவநீதிகிருஷ்ணன், தாமஸ் பாலன் உள்டப ஏராள மானஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையில் இன்று பாங்கி ஊழியர்கள் சந்திப்பு ஐ.ஓ.பி. வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆக. 6, 7ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

அரசுத் துறை வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதால், திட்டமிட்டபடி 2 நாள் ஸ்டிரைக்கை நடத்தவுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத் துணைத் தலைவர் என்.எஸ்.விர்க் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் ஒரு முறை செவ்வாய்க்கிழமை பேசவுள்ளோம். இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி 6, 7 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.

ஜூலை 21ம் தேதியே வேலைநிறுத்தம் குறித்த அறிவிப்பை வங்கி ஊழியர்கள் கொடுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 9 அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து, ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஸ்டிரைக் நடத்தப்படவுள்ளது.

ஊதிய உயர்வு, ஊனமுற்ற அல்லது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அனுதாப அடிப்படையில் பணி தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் முன் வைத்துள்ளனர்.

வெள்ளி, 31 ஜூலை, 2009

ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லையென்றால் தினசரி ரூ. 100 அபராதம்- ரிசர்வ் வங்கி உத்தரவு

தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் இருந்து (ஏ.டி.எம்) பணம் வராமல், வாடிக்கையாளர் கணக்கிலிருந்து குறைக்கப்பட்டால், புகார் கொடுத்த 12 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வங்கிகள் ஒரு நாளைக்கு ரூ. 100 கொடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள், பணம் எடுத்துக் கொள்வதற்காக, ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியில் கூட்டம் குறைவதுடன், அதன் ஊழியர்களுக்கு வேலைப்பளுவும் குறைகின்றது.

முன்பு கணக்கி வைத்திருந்த வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து மட்டுமே பணம் எடுக்க முடியும். மற்ற வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்து பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் எந்த வங்கியின் ஏ.டி.எம் இல் இருந்தும் பணம் எடுக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஒரு வங்கி கணக்கில் பணம் வைத்திருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம். இல் பணம் எடுத்தால் சில நேரங்களில் பணம் வருவதில்லை. ஆனால் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் குறைக்கப்பட்டு விடுகிறது.

இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்க சென்றால், அலைக்கழிக்கப்படுவதாக ஏராளமான புகார்கம் கூறப்பட்டன. இதன்படி கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று புகார் கொடுக்க சென்றால், எங்கள் வங்கியில் பணம் இருக்கிறது. எங்கள் வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியிருந்தால் உங்களுக்கு பணம் கிடைத்திருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.

பணம் எடுத்த ஏ.டி.எம். இயந்திரம் சொந்தமான வங்கி கிளைக்கு சென்று கேட்டால் `உங்களுக்கு எங்கள் வங்கியில் கணக்கு இல்லை. எனவே நீங்கள் எங்கு கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கியில் சென்று கேளுங்கள் என்று வங்கி அதிகாரிகள் கூறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், யாரிடம் சென்று புகார் கொடுப்பது என்று புரியாமல் மன உளைச்சலுக்கும், அலைக்கழிக்கும் உள்ளானார்கள்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்த பிரச்சனையை தீர்க்க, ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்து மற்றொரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து வரவில்லையென்றால், அது பற்றி புகார் தெரிவித்த 12 வேலை நாட்களுக்குள் பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம் இயந்திரத்திற்கு உடைமையாளரான வங்கி நடவடிக்கை எடுத்து அந்த தொகையை வாடிக்கையாளருக்கு கிடைக்க செய்ய வேண்டும். இல்லையென்றால் வாடிக்கையாளர் புகார் கொடுத்து 12 நாட்களுக்கு பிறகு அந்த வாடிக்கையாளரின் கணக்கில் தினசரி ரூ.100 வங்கி செலுத்த வேண்டும்.

இந்த தொகையை வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து, பணத்தை கொடுக்க இயலாத ஏ.டி.எம். வங்கி பெற்றுக் கொள்ளலாம்.

இது சம்பந்தமாக வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

LinkWithin

Blog Widget by LinkWithin