ஞாயிறு, 27 ஜூன், 2010

ஐபோனிலும் அழகு தமிழ்


முன்பெல்லாம் ஐபோனில் தமிழ் தளங்களை பார்பதற்க்கு மிகவும் சிரமமாக இருக்கும்,ஏனென்றால் ஐபோனில் தமிழ் எழுத்துரு (font) துணைபுரிவதில்லை,இப்பொழுது அந்த பிரச்சனைக்கு தீர்வு வந்தாச்சு,ஆம் !
இப்பொழுது ஆப்பிள் நிறுவனம் புதிய இயக்கு தளம்(OS)ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.இதில் மேலும் பல சிறப்பம்சங்கள் இருக்கிறது.உபயோகபடுத்தி பார்க்கவும்.

அதனை தரவிறக்க இந்த சுட்டியை கிளிக்கவும்.
http://www.apple.com/iphone/softwareupdate/

ஞாயிறு, 20 ஜூன், 2010

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

நமது ஊர் பெரிய பள்ளிவாசல் தெருவை சார்த்த மர்ஹும் ஜனாப் தாஹீம் ஆலிம் ( ஷாகுல் ஹமீது ) அவர்களின் தாயார் அவர்கள் இன்று (20-06-10) மதியம் 12.45 மணி அளவில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

வஸ்ஸலாம்

ஸ்ரீவை மக்கள்

திங்கள், 14 ஜூன், 2010

ஸ்ரீவைகுண்டத்தில் நள்ளிரவில் 2 மணி நேரம் திடீர் கரன்ட் கட் பொதுமக்கள் அவதி!

ஸ்ரீவைகுண்டத்தில் நள்ளிரவில் நேற்று திடீரென்று 2 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கொசுக்கடியால் தூக்கமின்றி தவித்தனர்.


ஸ்ரீவைகுண்டம் நகரப்பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதைக் கண்டித்து கடந்த வாரம் கடையடைப்பு போராட்டம் நடத்தி பஸ் மறியல் செய்யப்போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது போதிய காற்று இல்லாததால் மின் உற்பத்தி இல்லை. அதனால் கட வுள் கருணை இருந்தால் மட்டுமே கரன்ட் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்போது தமிழகத்தில் பரவலாக மழையும், காற்றும் இருந்து வருகிறது. ஆனால் மின்தடையும் தொடர்வதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தியாக உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 10.45 மணிமுதல் இரவு 12. 45 மணி வரையிலும் மின் தடை செய்யப்பட்டது. இதனால் குழந்தைகளும், வயோதிகர்களும் கொசுக்கடியால் மிகவும் சிரமப்பட்டனர்.


இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் பகு தியைப் பொறுத்தவரை மிகப் பெரிய தொழிற்சாலைகள் இல்லாத பகுதியாகும். இங்கு மின்பயன்பாடு என்பது குறை வானதாகும். ஆனால் நள்ளிரவு பொதுவாக வீடுகளில் மின்விசிறிகள் மட்டுமே இயங்கும்.மின்பயன்பாடு குறைவாக உள்ள இந்த சூழ்நிலையில் இரவு நேர மின்தடை தேவையற்றதாகும்.மேலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின்தடை செய்யப்படுவதால் அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், ஜெராக்ஸ், மாவுமில்கள் முடங்குகின்றன.


இதனால் பொருளாதார பாதிப்புக்கு வியாபாரிகள் உள்ளாகுகின்றனர். மேலும் போதிய தூக்கமின்றியே மனப்புழுக்கத்திற்கும், நோய்களுக்கும் காரணமாக இந்த மின்வெட்டு அமைந்து விடுகிறது.எனவே இரவு நேர மின்தடையை தவிர்த்து பகலிலும் மின்வெட்டு நேரத்தில் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


நன்றி : செய்தி , தூத்துக்குடி வெப்சைட்

ஸ்ரீவை.,யில் கல்வி விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீவைகுண்டத்தில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பேரணிக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சுடலையாண்டி தலைமை வகித்தார்.

டவுன் பஞ்., தலைவர் கந்தசிவசுப்பு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செபஸ்தியாயி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பண்டாரம், கே ஜிஎஸ் பள்ளி செயலர் சண்முகநாதன், தலைமை ஆசிரியர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் கவுன்சிலர் இளங்கோவன், காங்கிரஸ் சட்டசபை இளைஞர் அணி பொதுச் செயலாளர் சிங்கப்பன் மற்றும் தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட கேஜிஎஸ் துவக்கப்பள்ளி, ஹாஜிமியான் அப்துல் காதர் நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, டி.றி.டி. ஏ தொடக்கப்பள்ளி, கேஜிஎஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி ஸ்ரீவைகுண்டத்தின் அனைத்து தெருக்களுக்கு சென்று, அனைவருக்கும் கல்வி குறித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

வெள்ளி, 11 ஜூன், 2010

19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடக்கம்


சொவேடோ (ஜோஹன்னஸ்பர்க்): உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் இன்று தொடங்குகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19வது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த கோலாகல திருவிழா ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க விழா நேற்றிரவு ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பாடகி ஷகீரா, ஜான் லிஜென்ட், ஆஜ்ஜெலிக் கிடிஜோ, அலிசியா கீஸ், பிளாஸ் ஐட் பீஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று ஆடிப் பாடினர்.

இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன.

ஜூலை 11ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. அன்று இறுதி்ப் போட்டி நடைபெறுகிறது.

மொத்தம் 32 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன. 64 போட்டிகள் நடைபெறவுள்ளன. 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும், ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளன. பிரேசிலே கோப்பையை வெல்லும் என பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஸ்ரீவை., தாலுகாவில் 3 மாதத்தில் பட்டாமாறுதல் செய்யாமல் 2092 மனுக்கள்

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மூன்றே மாதத்தில் இரண்டாயிரத்து 92 மனுக்கள் பட்டாமாறுதல் செய்யாமல் உள்ளது என தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தெரிவித்துள்ளனர்.

கிடப்பில் போட்ட மனுக்களை உடனே பரிசீலனை செய்து பட்டா மாறுதல் செய்து வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கிராம வாழ் மக்கள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2005ம் ஆண்டு தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் பட்டாமாறுதல் சம்பந்தமாக வந்த மனுக்கள், பரிசீலனை செய்த மனுக்கள், பரிகாரம் தேடிய மனுக்கள் எவ்வளவு, நிலுவையில் உள்ள மனுக்கள் எவ்வளவு என பொது தகவல் அலுவலரிடம் கிராம வாழ் மக்கள் நல சங்க மாவட்ட அமைப்பாளர் நயினார் குலசேகரன் கேட்டுள்ளார்.

இதன்படி 2009ம் ஆண்டு நவம்பர், டிசம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் இருப்புமனுக்கள் 2546 என்றும், நடப்பு மாதம் வந்த மனுக்கள் 569 என்றும் ஆக மொத்தம் 3115 மனுக்கள் என்றும், அதில் முடிவு செய்யப்பட்ட மனுக்கள் 1023 மனுக்கள் என்றும், நிலுவையில் உள்ள மனுக்கள் 2092 என்றும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்தில் 2092 மனுக்கள் கிடப்பில், நிலுவையில் உள்ளதால் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிய 2092 மனுக்கள் பட்டா மாறுதல் செய்யாமல் உள்ளது. நிலுவையில் உள்ள 2092 மனுக்களை உடன் பரிசீலனை செய்து பட்டா மாறுதல் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தி : தினமலர்

வியாழன், 10 ஜூன், 2010

வந்தாச்சு மக்கா மெட்ரோ ரெயில்


மக்கா மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இவ்வருட ஹஜ்ஜுக்கு முன்னதாக மக்கா மெட்ரோ ரெயிலை இயக்க சவூதி ரெயில்வே திட்டமிட்டுள்ளது.


மக்கா மெட்ரோ ரயில் திட்டம் மக்கா, மினா, முஜ்தலிபா, அரபாத் ஆகிய புனிதப்பகுதிகளை இணைப்பதாகும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 35 சதவீத பணிகளை நிறைவு செய்துள்ளது. எனவே இவ்வாண்டு ஹஜ்ஜில் மினா,முஜ்தலிபா,அரபாத் ஆகிய இடங்களுக்கு ரயிலிலேயே சென்று வரலாம்.

திட்டத்தின் இறுதியில் இவ்வழித்தடம் மக்காவையும் உள்ளடக்கியதாக இருக்கும்.தற்போது அரபாத்தில் மூன்று நிறுத்தங்களும், முஜ்தலிபா மற்றும் மினாவுக்கிடையில் மேலும் மூன்று நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.மக்கள் நெரிசல் மிகுந்த இப்பகுதிகளில்;தான் கடும் போக்குவரத்து நெறுக்கடியும் விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. ஹஜ் காலங்களில் ஏறக்குறைய 50,000 வாகனங்களில் மக்கள் இப்பகுதிகளுக்கு சென்று வந்தனர்.தற்போதைய வசதியைக் கொண்டு மணிக்கு 60,000 லிருந்து 80,000 வரையிலான யாத்ரிகர்களுக்கு போக்குவரத்து வசதியை அளிக்க முடியும்.


இந்த ரயில் 23 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்ட 12 பெட்டிகளை கொண்டது.எதிர் வரும் வருடங்களில் மக்கா மெட்ரோ(Makkah Metro) ரயில் திட்டம் மக்காவையும் மதினாவையும் இணைக்கும் ஹரமைன் ரயில்வே(Haramine Railway) மற்றும் அரபு நாடுகளை இணைக்கும் வளைகுடா ரெயில்வேயுடனும்(Gulf Railway) இணைக்கப்படும்.


இனி வயதானவர்களும் முடியாதவர்களும் ஹஜ்ஜின் நெறுக்கடியைப் பற்றிய அச்சமின்றி நிம்மதியாக மக்காவை நோக்கி புறப்படலாம். (இன்ஷா அல்லாஹ்)
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

ஸ்ரீவை K G S பள்ளியில் சாதனை படைத்தும் சாதி சான்றிதழ் கிடைக்காததால் இன்ஜி., கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவன்

ஸ்ரீவைகுண்டம், : ஸ்ரீவைகுண்டத்தில் சாதி சான்றிதழ் கிடைக்காததால் இன்ஜி., கல்லூரியில் சேரமுடியாமல் தவிக்கும் மாணவருக்கு அரசு உடனே சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் பாடிவிட்டு போய்விட்டார். ஆனால் இன்று பள்ளியில் சேரும் காலம் முதல் உயர்கல்வி, வேலை வாய்ப்பு என்றதோடு மட்டுமல்லாமல், மறைமுகமாக அரசியல் கட்சிகளில், தேர்தல் நேரத்தில், டிக்கெட் வழங்குவது முதல் மந்திரி சபை அமைவது வரை அனைத்து விபரங்களும் ஜாதியின் அடிப்படையில் தான் நடந்தேறி வருகிறது.


10ம் வகுப்பிலும், 12ம் வகுப்பிலும் தொடர்ந்து பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த ஏழை மாணவரின் நிலையோ சாதி சான்றிதழ் இல்லாமல் துடுப்பில்லாத படகுபோல் தத்தளித்து கொண்டு இருக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவர் கணேசன் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பேச்சிமுத்து, தாயார் பார்வதி ஆகியோரும் திருவிழாவில் பலூன் விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் வருமானம் சராசரி குடும்ப வருமானத்தைவிட மிகக்குறைவு. குடிசை வீட்டில் மின்சாரமே இன்று வரை இல்லை.ஆனாலும் 10ம் வகுப்பு தேர்வில் 463 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலே முதலிடமும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1028 மார்க்குகள் எடுத்து பள்ளியில் முதல் மாணவனாக மீண்டும் சாதனை படைத்துள்ளார். தெருவிளக்கில் படித்து சாதனை படைத்த கணேசனுக்கு அரசோ இது வரை சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

காட்டுநாயக்கர் சமுதாயத் தைச் சேர்ந்த இவருக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அரசோ இந்த சமுதாயம் செங்கோட்டை, குற்றாலம், பாபநாசம் போன்ற பகுதியில் வசிக்கின்றனர். அதனால் உங்களுக்கு இங்கு வழங்க முடியாது என கூறிவிட்டனர்.மேற்கண்ட பழைய ரெக்கார்டுகள் அனைத்தும் 1900ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உள்ளவை. அதை வைத்துக் கொண்டு சுதந்திர இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு ரேஷன் கார்டு வழங்கிய பிறகும், இந்த முகவரியில் உள்ள ஒருவருக்கு அவரது சொந்த சாதியை குறிப்பிடும் சாதி சான்றிதழ் வழங்காததால் அந்த ஏழை மாணவரின் இன்ஜினி யரிங் படிப்பு நூல் அறுந்த பட்டம் போல் வானில் தத்தளிக்கிறது.

அனைத்து வசதிகள் இருந்து சாதிக்கும் நகர்புற மாணவர்களுக்கு இணையாக தெருவிளக்கில் படித்து கூரைவீட்டில் தங்கி படித்து சாதனை படைத்து பேர்வாங்கிய மாணவர் கணேசனுக்கு அரசு போர்கால நடவடிக்கை எடுத்து அவருக்கு சாதி சான்றிதழ் வழங்கி அவரின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும். மேலும் அவரின் படிப்பு செலவிற் கு அரசு உதவிட வேண்டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி : தினமலர்

"ஜாக்கி'கள் மூலம் வீட்டை அப்படியே தூக்கி உயர்த்தி கட்டும் அதிசய தொழில்நுட்பம்


சென்னை:மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 60 டன் எடை கொண்ட ஒரு அடுக்குமாடி வீட்டை பெயர்த்து, 260 "ஜாக்கி'கள் மூலம் அப்படியே தூக்கி, நான்கு அடி உயர்த்தும் புதிய கட்டட தொழில்நுட்ப பணிகள், தமிழகத்தில் முதல் முறையாக வேளச்சேரியில் நடந்து வருகிறது.


மழைக்காலம் என்றால் வேளச்சேரி, வெள்ளக் காடாகிவிடும். குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கும். படகுகள் மூலம் தான் பயணிக்க முடியும். இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ராமன் என்ற ஆடிட்டர் ஒருவர், நவீன தொழில்நுட்பம் மூலம் தனது வீட்டை பெயர்த்து, வாகனங்களுக்கு பயன்படுத்தும் "ஜாக்கி'கள் மூலம் நான்கு அடி உயரம் தூக்கி, கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ராமன் மனைவி லட்சுமி கூறியதாவது: நாங்கள் வேளச்சேரி, பேபி நகர், பட்டுக்கோட்டை முத்துக்குமாரசாமி சாலையில் 2001ம் ஆண்டு இடத்துடன் புதியதாக கட்டப்பட்ட வீட்டை வாங்கினோம். கீழ் தளம், மேல் தளம் 2,600 சதுர அடியில் கட்டப்பட்டது. குடிவந்த சில மாதங்களில் மழைக்காலம் துவங்கியது. அப்போது, வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கண்டு அதிர்ச்சியடைந்தோம். எங்கள் வீட்டிற்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எங்களுக்கு இதே நிலைதான். விமோசனம் கேட்டு மாநகராட்சியை அனுகினோம். பலரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது, முகப்பு பகுதியில் தடுப்பு கட்டுங்கள்; வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துங்கள்; கீழ்தளத்தில் உள்ள அறைகளை அகற்றிவிட்டு கார் "பார்க்கிங்' ஆக்கிவிடுங்கள் என தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.


வீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது,"உங்கள் வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விடலாம். அதில், எனக்கு 60 சதவீதமும்; உங்களுக்கு 40 சதவீதம்' என பங்குபோட ஆரம்பித்தார். இதனால், நாங்கள் குழம்பிப் போனோம். இறுதியில், என் கணவர் டில்லியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது, வீட்டை இடிக்காமல் பெயர்த்து, வாகனங்களுக்கு டயர் மாற்றப் பயன்படுத்தும் "ஜாக்கி'களை பயன்படுத்தி தேவையான உயரத்திற்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். அவ்வாறு உயரமாக்கப்பட்ட, கட்டப்படும் சில வீடுகளையும் நேரில் கண்டு அதிசயித்தோம். தற்போது, எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து நான்கு அடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு லட்சுமி கூறினார்.


இந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் அரியானாவை சேர்ந்த அர்கேஷ் குமார் சவுகான் கூறுகையில்,""ஜாக்கி'கள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டட தொழில்நுட்ப முறையை நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். முதன் முதலில் அரியானா பகுதியில் இருந்த பாலத்தை பெயர்த்து உயர்த்தினோம். அதன் பிறகு பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்காமல், பெயர்த்து தேவையான உயரத்திற்கு உயர்த்திக் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக ராமனின் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த மாதம் 16ம் தேதி பணிகளை துவக்கினோம். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து விடும். இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளோம். பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் எங்கள் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளோம்' என்றார்.


வீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை: வேளச்சேரியில் உள்ள ராமன் வீட்டில் 16 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2,600 சதுர அடி, 60 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களின் இருபுறமும் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக "ஜாக்கி'கள் வைக்கின்றனர். அந்த வீட்டிற்கு 260 "ஜாக்கி'கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவையான உயரத்திற்கு 16 பேரும் ஒரே நேரத்தில் "ஜாக்கி'களை இயக்கி உயர்த்துகின்றனர். பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் செங்கற்களை வைத்து கட்டுகின்றனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. மூன்று அடி வரை உயர்த்துவதற்கு, சதுர அடிக்கு 225 ரூபாய் கூலி மட்டும் வசூலிக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.80, ரூ.100 என வசூலிக்கின்றனர். ஒரு மாதத்திற்குள் வீட்டை உயர்த்தும் பணிகள் முடிக்கப்படுகின்றன.


செய்தி : தினமலர்

ஞாயிறு, 6 ஜூன், 2010

யூசுப் எஸ்டஸ் பற்றி ஒரு குறிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சாமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.


மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...


இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்


யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).


இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்ப்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.


1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.


அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...


"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"


"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப் போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.


இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது...


நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.


முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...


உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?


ஆம்...


ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.


முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன்.




இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.


இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.


இதுதான் நான் எதிர்பாத்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான்.


ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம்.


பல கேள்விகள்...


நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"


கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு, இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.


"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்கள்.


பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திருத்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...


என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...


எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....


இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..


ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்...


பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா?


இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...


என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்?


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?


என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா?


இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன்.


இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...


சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.


கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...


உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன்.







பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார்,


நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...


நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தியது அது.


மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.


கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.


எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...


ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...


அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...


என்ன?


ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...


அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...


இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்..


என் மனைவி என்னை நம்பவில்லை.


ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...


நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார்.


சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன்.


இறைவா எனக்கு நல்வழி காட்டு....


இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுபானல்லாஹ்...


என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன்.


நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான்.


dad,..... அப்போ நீங்கள்?


இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.


பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...


எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்?


நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம்,


நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது?


அவர்கள் அவரிடம் சென்று அந்த கேள்வியை கேட்டனர்...


அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."


சுபானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."


யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர்.


இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.


இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்


இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...


இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Sheikh Yusuf Estes talk on "priests and Preachers Coming to Islam" - for Islam today.
2. Sheikh Yusuf Estes interview on "How he came to Islam" with eddie - for thedeenshow.
3. Sheikh Yusuf Estes "How Yusuf estes came to Islam" - Islamtomorrowdotcom/yusuf_story.htm


நன்றி :ஆஷிக் அஹ்மத்

இன்றைய நம் சமுதாய பெண்களின் முக்காடு!

يٰأَيُّهَا النَّبِىُّ قُل لِأَزوٰجِكَ وَبَناتِكَ وَنِساءِ المُؤمِنينَ يُدنينَ عَلَيهِنَّ مِن جَلٰبيبِهِنَّ ۚ ذٰلِكَ أَدنىٰ أَن يُعرَفنَ فَلا يُؤذَينَ ۗ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا

اநபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும் படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் 33 :59]

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு ‘அஸ்மாவே’ நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது’ என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்

கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல. இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில் செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம் இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம்.


يٰأَيُّهَا النَّبِىُّ قُل لِأَزوٰجِكَ وَبَناتِكَ وَنِساءِ المُؤمِنينَ يُدنينَ عَلَيهِنَّ مِن جَلٰبيبِهِنَّ ۚ ذٰلِكَ أَدنىٰ أَن يُعرَفنَ فَلا يُؤذَينَ ۗ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا
நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும் படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் 33 :59]

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு ‘அஸ்மாவே’ நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது’ என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்

கீழ்கண்ட கட்டுரையில் வரும் சம்பவங்களும், நபர்களும் உண்மையே அன்றி கற்பனை அல்ல. இக்கட்டுரையில் வரும் சம்பவங்கள், நபர்கள் உங்களை போல் இருந்தால் அதற்கு தாங்களே பொறுப்பு. நாங்கள் அல்ல. நமது சகோதரிகளின் அலட்சியத்தால் அல்லது கவன குறைவால் இது கூட சரியான வார்த்தையாக தோன்றவில்லை. இப்படி கூட நடக்குமா? என்ற எண்ணத்தில் செயல்படுவதால் இப்படி நம்மை எண்ண வைக்கிறது. இதை படித்துவிட்டு சகோதரிகளிடம் இருந்து காரசாரமான அம்பு மழைகளை எதிர்பார்க்கிறோம். நாம் குறை சொல்வது நோக்கமல்ல. நம்மை நாமே பரிசோதனை செய்வதே நோக்கம்.

முக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

1.பார்த்தால் முக்காடு

இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!

2.கிராமிய முக்காடு

முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?

3.கிழடு கட்டை முக்காடு

இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!

4.சீருடை முக்காடு (Uniform)

இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?

5.சவுதி முக்காடு

இவர்கள் சவூதி அல்லது மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?

6.ஏர்போர்ட் முக்காடு

இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.

கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ…..

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம். கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் மேலை நாடுகளில் முஸ்லீகள் தாங்கள் மட்டும் முக்காடு அணிந்தால் போதாது தங்களது குழந்தைளுக்கும் பள்ளிக்கூடத்தில் முக்காடு போட அனுமதி வேண்டும் என போராட்டம் செய்கிறார்கள், வாகன உரிமை சான்றிதழில் முக்காடுடன் உள்ள படம்தான் வேண்டும் என அரசாங்கத்தின் மீது வழக்கு போடுகிறார்கள். ஒரு பிரபலமான தமிழ் நடிகை படப்பிடிப்புக்கு வரும்போது தன்னை முழுமையாக மறைத்துக்கொண்டு முக்காடு இட்டு வருகிறாள். ஏன் என்ன காரணம் என கேட்டதற்கு மக்களின் கண்களில் இருந்து தப்பவே என்கிறார் !!!!!!

நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.

“உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை… நாங்கள் கூலாங்கற்கள் என்றால்… சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! “
பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்.


நன்றி:-அபூ முஹம்மது, சிங்கப்பூர்

LinkWithin

Blog Widget by LinkWithin