திங்கள், 14 ஜூன், 2010

ஸ்ரீவை.,யில் கல்வி விழிப்புணர்வு பேரணி

ஸ்ரீவைகுண்டத்தில் கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பேரணிக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சுடலையாண்டி தலைமை வகித்தார்.

டவுன் பஞ்., தலைவர் கந்தசிவசுப்பு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செபஸ்தியாயி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பண்டாரம், கே ஜிஎஸ் பள்ளி செயலர் சண்முகநாதன், தலைமை ஆசிரியர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் கவுன்சிலர் இளங்கோவன், காங்கிரஸ் சட்டசபை இளைஞர் அணி பொதுச் செயலாளர் சிங்கப்பன் மற்றும் தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட கேஜிஎஸ் துவக்கப்பள்ளி, ஹாஜிமியான் அப்துல் காதர் நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, டி.றி.டி. ஏ தொடக்கப்பள்ளி, கேஜிஎஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி ஸ்ரீவைகுண்டத்தின் அனைத்து தெருக்களுக்கு சென்று, அனைவருக்கும் கல்வி குறித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin