சனி, 6 ஜூன், 2009

ஓய்வூதிய தகவல் பெற எஸ்.எம்.எஸ். சேவை நாளை மறுநாள் அறிமுகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் அதுகுறித்த விவரங்களை "செல்போன் எஸ்.எம்.எஸ்.' மூலம் தெரிந்துகொள்ளும் திட்டம் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு. ஜெய ராமன் கலந்து கொண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

இம் மாவட்டத்தில் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய விவரங்களை இந்த எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் அனைத்து ஓய்வூதிய சங்க நிர்வாகிகளும், ஓய்வூதியர்களும் கலந்து கொண்டு பயன்பெறும்படி மாவட்டக் கருவூல அலுவலர் ப. முத்தையா கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin