சனி, 6 ஜூன், 2009

வேலைவாய்ப்பு பதிவு விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் பெறலாம்'

தூத்துக்குடி மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா. பிரைட் சேவியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நடக்கிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் வரும் 8-ம் தேதியும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் 9-ம் தேதியும், சாத்தான்குளம், திருச்செந்தூர் வட்டங்களைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் 10-ம் தேதியும் தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், வெள்ளிக்கிழமை இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்க்கும் பணி வழக்கம் போல் நடைபெறும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin