சனி, 29 ஆகஸ்ட், 2009

மேலப்பாளையத்தில் தமுமுக வார்டு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மேலப்பாளையம் 29-வது வார்டு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ். ரசூல்மைதீன் தலைமை வகித்தார். வார்டு தலைவர் செய்யது அப்துல் காதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மேலப்பாளையம் அமீன்புரம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும்.

2. காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

3. மேலப்பாளையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin