வியாழன், 17 செப்டம்பர், 2009

இந்தியாவில் 2 கார்களை அறிமுகம் செய்த நிஸ்ஸான்


நிஸ்ஸான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை உருவாக்க அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து நேற்று ஒரே நாளில் நிஸ்ஸான் எக்ஸ் டிரைல் ஸ்போர்ட் கார் மற்றும் சொகுசு டியனா சேடான் என்ற இரண்டு கார்களின் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஜப்பானின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான நிஸ்ஸானைஇந்தியாில் கவனம் செலுத்து தூண்டியுள்ளது.

நிஸ்ஸான் நிறுவனம் இந்த கார்களை ஜப்பானில் தயாரித்து கப்பல் மூலம்இந்தியாுக்கு 109 சதவீத இறக்குமதி வரியுடன் கொண்டு வருகிறது. இதனால் எக்ஸ் டிரைல் காரின் விலை ரூ. 20 லட்சமாகவும், டியானா காரின் விலை ரூ. 21 லட்சமாகவும் இருக்கிறது.

இது குறித்து நிஸ்ஸான்இந்தியாநிறுவனத்தின் பொது இயக்குனர் கிமினோபு டோகுயாமா கூறுகையில், 2009ம் ஆண்டில் நாங்கள் அதிகம் முதலீடு செய்யவிருக்கும் நாடுஇந்தியாதான்.

இந்தியாவை உலக சந்தையின் முக்கிய பகுதியாக தேர்வு செய்துள்ளோம். இதுவரைஇந்தியாில் எக்ஸ் டிரைல் கார்கள் 1000மும், டியானா செடான் 300ம் விற்றுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார்களின் புதிய மாடல்கள் நன்றாக போகும் என எதிர்பார்க்கிறோம்.

2012ல்இந்தியாில் 9 ரக கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதில் 5 இந்தியாவிலே தயாரிக்கப்படும்.

வரும் மே 2010ம் ஆண்டு முதல் சென்னை தொழிற்சாலையில் இருந்து மைக்ரா ரக காரின் புதிய மாடல் தயாரிக்கப்படும். மைக்ரா கார் தயாரிப்பில் தயாரிப்பு செலவு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா வில் தயாரிக்கும் போது தரமும் நன்றாக இருக்கிறது. அதே சமயத்தில் பணமும் மிச்சமாகிறது.

டோயோடா, ஹோன்டா நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் நாங்கள் இந்திய சந்தைக்கு தாமதமாக தான் வந்துள்ளோம் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin