செவ்வாய், 12 ஜூலை, 2011

ஸ்ரீவையில் வரும் 15ம் தேதி அனுமதி இன்றி தண்ணீர் எடுப்பதை தடுக்க கோரிக்கை போராட்டம்

தாமிரபரணி ஆற்றில் அனுமதியின்றி தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை தடை செய்யவேண்டும் என கோரி வரும் 15ம் தேதி மா.கம்யூ.,சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய சி.பி.எம்., கூட்டம் நடந்தது.

மார்க்ஸ் இல்லத்தில் வைத்து நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கணபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய சிபிஎம் செயலாளர் கந்தசாமி, கூட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் பற்றி பேசினார். ராமலிங்கம், சுவாமிதாஸ், முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகால், தென்கால் பகுதிகளுக்கு முறையான பாசனவசதிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததால் வாழை, நெல், சாகுபடி கருகும் நிலையில் உள்ளது. அணையில் உள்ள தண்ணீரும் ராட்சத குழாய்கள் மூலம் தொழிற்சாலைகளுக்கு செல்வதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே கடல்நீரை நல்ல நீராக்கி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டியும், அணையை தூர்வார வன இலாக்கா விரைந்து காலம் கடத்தாமல் அனுமதி வழங்க வேண்டும் எனவும், அமலை செடிகளை அப்புறப்படுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் எந்த அனுமதியின்றியும் தண்ணீர் எடுக்கும் முயற்சிகளை கண்டித்தும் வரும் 15ம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் உண்ணாவிரதம் இருக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

செய்தித்தாள் : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin