வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இன்று தங்கபாலு, கனிமொழி பிரசாரம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வியாழக்கிழமை (ஆக. 13) தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இதுதொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். ஜஸ்டின் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஆக. 13, 14-ம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

வியாழக்கிழமை (ஆக. 13) மாலை 5 மணிக்கு அவர் பழையகாயலில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். தொடர்ந்து முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல், சிறுதொண்டநல்லூர், சாயர்புரம், பண்டாரவிளை, சிவகளை, பேரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யும் அவர் ஸ்ரீவைகுண்டத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

2-ம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தூத்துக்குடி அருகேயுள்ள திரவியபுரத்தில் தங்கபாலு பிரசாரத்தைத் தொடங்குகிறார். தொடர்ந்து புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், செந்தியம்பலம், கட்டாலங்குளம், முடிவைத்தானேந்தல், வர்த்தகரெட்டிப்பட்டி, திம்மராஜபுரம், பேரூரணி, தளவாய்புரம் மற்றும் கருங்குளம் ஒன்றியப் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார் என்றார் அவர்.

கனிமொழி பிரசாரம்: இதேபோல, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இவர் மாலை 4 மணிக்கு தனது பிரசாரத்தை புதுக்கோட்டையில் தொடங்குகிறார். தொடர்ந்து சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், சிவத்தையாபுரம், சாயர்புரம், சுப்பிரமணியபுரம், சிறுதொண்டநல்லூர், ஏரல், மங்களகுறிச்சி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யும் அவர் ஆழ்வார்தோப்பில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin