சனி, 4 ஜூலை, 2009

குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது


குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக சீசன் களைகட்டியுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை முதல் அவ்வப்போது மிதமான வெயில் அடித்தது. நாள்முழுவதும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.

இதனால், குற்றாலம் பேரருவி, புலியருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்கொட்டுகிறது.

குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை மாலை பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்தது.

ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகமாக காணப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin