சனி, 4 ஜூலை, 2009

கன்னியாகுமரியில் இஸ்லாமிய கல்வி, சேவை நிறுவன தொடக்க விழா

கன்னியாகுமரியில் இஸ்லாமிய கல்வி மற்றும் சேவை நிறுவன துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அமைப்பின் தலைவர் எம்.எம். ஹனீபா தலைமை வகித்தார்.

விழாவில் கலந்து கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கன்னியாகுமரி டி.எஸ்.பி. சுந்தரவடிவேல் பேசியதாவது: கல்வி என்பது ஒரு சமுதாயத்தில் உயிர் போன்றது. அந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதும் கூட.

உயர்ந்த எண்ணங்களை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்றார் அவர். விழாவில், கல்வியாளர் ஆன்டோ சேவியர், கன்னியாகுமரி பங்குத்தந்தை லியோன் எஸ்.கென்சன், உதவி பங்குத்தந்தை ஜெகதீஷ், பேரூராட்சி உறுப்பினர் காஜா முகைதீன் உள்ளிட்டோர் பேசினர். செயலர் இக்பால் வரவேற்றார். பொருளாளர் என்.கமால் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin