வியாழன், 4 ஜூன், 2009

வைகாசி விசாகத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜூன் 4) 3நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை நடக்கிறது. இந்த விழாவிற்காக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் நலன் கருதி நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் காலை 9.30மணிக்கு நெல்லையிலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு பகல் 11.15 திருச்செந்தூர் வருகிறது. அதே போல் மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இந்த ரயில் வரும் 6ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin