புதன், 18 மார்ச், 2009

சவுதி அரேபியாவில் மனதை உருக்கும் சம்பவம் !

சவுதி அரேபியாவில் மனதை உருக்கும் சம்பவம் !மூளைச்சாவு அடைந்த இந்தியரின் உடல் உறுப்புகள் 9 பேரின் உயிரை காப்பாற்றின!

சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அவர் பெயர் விவரம் அறிவிக்கப்படவில்லை. அவர் உடலில் இருந்து முக்கியமான உறுப்புகள் எடுக்கப்பட்டு 9பேருக்கு பொருத்தப்பட்டன. என்னென்ன உறுப்புகள் எடுக்கப்பட்டன என்பதையும் டாக்டர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

அவரின் உறுப்புகளில் ஒன்றை பெற்றவர்களில் ஒருவர் பெண் ஆவார். அவர் ஜெட்டா நகரில் வசித்து வருகிறார். அவர் உயிர் பிழைக்க வேண்டுமானால் அவருக்கு புதிதாக நுரையீரல் பொருத்தப்பட வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.

நுரையீரலில் கட்டி இருந்ததால் அவர் கடந்த 8 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்தார். அவர் நுரையீரலை அகற்றி விட்டு புதிதாக நுரையீரலை தானம் வாங்கி பொருத்த வேண்டும் என்று டாக்டர்கள் கடந்தமாதம் தீர்மானித்தனர். இதற்காக தானம் தருபவரை எதிர்பார்த்து அவரும், டாக்டர்களும் காத்து இருந்தனர். இந்த நேரத்தில் தான் இந்தியர் மூளை சாவு அடைந்த செய்தி தெரியவந்தது. ரியாத்தில் உள்ள பைசல் மன்னர் ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்பத்திரியில் இந்த ஆபரேஷன் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin