செவ்வாய், 7 ஜூன், 2011

ஸ்ரீவையில், அதிக அளவில் குப்பை கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் !

ஸ்ரீவைகுண்டம் பாலத்தின் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் டிராக்டர் மூலம் குப்பைகள் அள்ளப்படுகின்றன.

குப்பைகளைச் சேகரிப்பதற்காக அனைத்து வார்டுகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர முகூர்த்த நாள்களில் திருமண மண்டபங்களில் வீணாகும் பொருள்கள் சாப்பிட்ட பின்பு கொட்டப்படும் இலைகள் என குப்பைகள் அளவுக்கு அதிகமாக கொட்டப்படுகின்றன.

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் புதுக்குடி சாலையோர டீ கடைகளில் டீ குடித்து விட்டு, போடும் பிளாஸ்டிக் கப்புகள் குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகிறது.

இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் டிராக்டர் மூலமாக பேரூராட்சி பணியாளர்கள் அள்ளி ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே பல ஆண்டுகளாக கொட்டி வருகிறார்கள்.

இது பலஅடி உயரத்துக்கு குப்பைமேடாக உருவாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin