காயல்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை, பாளையங்கோட்டை கோல்ட் அன்ட் செஸ்ட் கிளினிக் மற்றும் திருநெல்வேலி சன் ரேடியன் பார்மா இணைந்து நடத்திய இலவச மருத்துவ பரிசோதனை முகாம் காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
மருத்துவர்கள் சரவணன், ஜாபர் சாதிக், அபுல்ஹஸன் மற்றும் பிசியோ தெரபிஸ்ட் ஆகியோர் சிகிச்சையளித்தனர்.
பிலிப், முஸ்தபா, கண்ணதாசன் மற்றும் லிங்கசாமி ஆகியோர் நோயாளிகளுக்கு இரத்தப்பரிசோதனை செய்தனர்.
முகாமில் அரிமா சாமு ரத்ததானக் கழக துணைத் தலைவர் முஹ்சின், அரிமா லரீப், எம்.எல். இப்ராஹிம் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.
துளிர் ஷேக்னா நன்றி கூறினார்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஷிஃபா மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் எஸ்.எச். செய்யிது அப்துல் காதர் செய்திருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக