
தமிழக அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் உட்பட ஆறு பேர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சண்முகநாதன் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். தேர்தல் நேரத்தில் அதிமுக வெற்றிக்காக கடுமையாக உழைத்த சண்முகநாதனுக்கு இந்த முறை ஜெ. இந்து அறநிலையத்துறை அமைச்சராக வாய்ப்பளித்தார்.
இதன் மூலம் ஸ்ரீவைகுண்டத்துக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கிடைத்தது.ஆனால் அது 5 மாதத்தில் பறிக்கப்பட்டது.இதை போல் 2001 ஆண்டும் ஸ்ரீவைக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கொடுத்து 9 மாதத்திலேயே பின் பறிக்கப்பட்டது
கடந்த 2001ம் ஆண்டிலும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகநாதன். அப்போது அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 9 மாதத்திலேயே சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2006 – ம் ஆண்டுவரை எம்எல்ஏவாகவே பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக