புதன், 2 நவம்பர், 2011

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்வு

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அ.முத்துலட்சுமி, துணைத் தலைவராக சு.வசந்தா ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்தம் உள்ள 14 வார்டு உறுப்பினர்களில், அதிமுக சார்பில் 10 பேரும், திமுக சார்பில் ஒருவரும், தேமுதிக சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றிபெற்றனர்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் தேர்தல், தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 13-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.முத்துலட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் 9-வது வார்டு உறுப்பினர் சு. வசந்தாவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றியச் செயலர் வெ.ஆறுமுகநயினார், பெருங்குளம் நகரச் செயலர் செல்லத்துரை, திருப்பாற்கடல், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin