வெள்ளி, 25 மார்ச், 2011

ஸ்ரீவையில் நேற்று அதிமுக.வேட்பாளர் சண்முகநாதன் மனுதாக்கல் செய்தார்

ஸ்ரீவைகுண்டம் சட்டசபை அதிமுக தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளருமான சண்முகநாதன் அறிவிக்கப்பட்டார்.


இதையொட்டி அவர் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

கூட்டணி கட்சிகள் தொண்டர்களோடு ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஊர்வலமாக சென்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரும் தேர்தல் அதிகாரியுமான வசந்தாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

ஒன்றிய கழக செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், வக்கீல் பிரிவு சேகர், மாவட்ட பஞ்.தலைவர் சின்னதுரை, பெருங்குளம் நகர செயலாளர் செல்லதுரை மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin