வியாழன், 17 மார்ச், 2011

ஸ்ரீவைகுண்டம் அருகே பறக்கும் படை மடக்கி பிடித்த ரூ. 17 லட்சம்.

த‌மிழக‌ம் முழுவது‌ம் வாகன சோதனை‌ காவ‌ல்துறை‌ செ‌ய்து‌ வருகிறது. அதை போல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி பறக்கும் படை வட்டாட்சியர் சங்கரநாராயணன் தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், முத்தையா உள்ளிட்ட போலீஸார் ஸ்ரீவை பகுதிலும் செக் போஸ்ட் அமைத்து வாகன சோதனை செய்து வருகின்றனர்.



பேட்மாநகரம் செக் போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த அம்பாசிடர் காரில் ரூ.17 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் அப்பணம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பட்டு காஸ் ஏஜென்சீஸ் மேலாளர் தூத்துக்குடி மெர்க்கன்டைல் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. பின்னர் முறையான கணக்குகள் காண்பிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin