சனி, 29 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ. நன்றி தெரிவிப்பு

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.பி. சுடலையாண்டி எம்.எல்.ஏ வெள்ளிக்கிழமை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் செய்தார்.

பழையகாயலில் மாலை 5 மணிக்கு சுடலையாண்டி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து புல்லாவெளி, கோவங்காடு, மஞ்சள்நீர்காயல், அகரம், மாரமங்கலம், இடையர்காடு, முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.

அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். ஜஸ்டின், ஒன்றியக் குழு உறுப்பினர் இளங்கோ, பொட்டல் ஆறுமுகம், ராயப்பன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin