
குற்றாலம் பேரருவியில் அதிக தண்ணீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீக்கப்பட்டதால் வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் சாரல்மழை காரணமாக, அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நேற்று காலை 7 மணிமுதல் 11 மணி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடைவிதித்தனர்.
இதனால் புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது. குற்றாலம் பகுதியில் சாரல்மழையும், குளிர்ந்த காற்றும் வீசியது.இன்று வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.
அலெக்ஸ், தென்காசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக