சனி, 3 அக்டோபர், 2009

நெல்லை - கள்ளிக்குளம் வி.ஏ.ஓ.,க்கு ஆப்பு

திருநெல்வேலி: நெல்லை அருகே, நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்து தர, 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் சுதன்(31). இவர் வாங்கிய நிலத்தின் பட்டாவை, தன் பெயருக்கு மாற்றித் தரக்கோரி, கள்ளிக்குளம் வி.ஏ.ஓ., ராஜலிங்கத்திடம் (56) விண்ணப்பித்தார். இதற்காக ராஜலிங்கம், 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மனமில்லாமல், நெல்லை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் சுதன் புகார் கொடுத்தார். நேற்று, கள்ளிக்குளம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், சுதனிடமிருந்து 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ., ராஜலிங்கத்தை கைது செய்தனர்; அவரது வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டது.
நன்றி நெல்லை நண்பர்கள் நியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin