சனி, 27 ஜூன், 2009

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் உயர்கல்வி பயில சீன கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் நூருல் இஸ்லாம் கல்வி அறக்கட்டளை கல்லூரியில் உயர்கல்வி பயில சீன நாட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில சீன நாட்டைச் சேர்ந்த பீஜிங் ராங்-ஷிருட்டாங் கல்வி நிறுவனம் 25.06.2009 அன்று நூருல் இஸ்லாம் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைவர் ஜியோ வெய்கோங், பொது மேலாளர் ஜியோ வெய்டோங், டீன்டாங்க் ஜெய்ங், சென்டே செங் ஆகியோர் என்.ஐ. அறக்கட்டளையின் தலைவர் மஜீத்கானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். என்.ஐ. பல்கலை. இணை வேந்தர் முத்துநாயகம், துணைவேந்தர் சிவசுப்பிரமணியன், இணைப் பதிவாளர் ஜனார்த்தனன், ராம்தாஸ், சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin