சனி, 27 ஜூன், 2009

குற்றாலத்தில் களை கட்டும் சீசன்

குற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது. அருவிகளில் வெள்ளிக்கிழமை தண்ணீர்வரத்து அதிகரித்தது.

குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமை அதிகாலையும் சாரல் மழை பெய்தது.

நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் மனதுக்கு இதமளிக்கும் குளுகுளு தென்றல் காற்றும் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது.

பேரருவி மற்றும் ஐந்தருவிகளில் வியாழக்கிழமையை விட தண்ணீர் அதிகளவில் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

இருப்பினும், பழைய குற்றாலம் அருவியில் மட்டும் மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது.

அதே வேளையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin