வெள்ளி, 26 ஜூன், 2009

ஸ்ரீவை, ஆதிச்சநல்லூர்: புதைந்திருக்கும் தமிழர் வரலாறு


தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மண் மேடாக காட்சியளிக்கும் ஆதிச்சநல்லூரில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள் நெல் பயிரிட்டு வந்துள்ளனர்.

தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அப்பகுதியில் முழுவீச்சில் ஆய்வுகள் நடைபெற்றால் தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் பல அரிய வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்.

இப்பகுதியில் இதுவரை சுமார் 160 சுடுமண் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன.

ஆதிச்சநல்லூர் அக்காலத்தில் பெரும் நாகரீகத்தைக் கொண்ட நகரமாக விளங்கியுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதிச்சநல்லூரில் பழங்காலத் தமிழர்கள் வாழ்ந்த தகவலை முதலில் கண்டுபிடித்து வெளி உலகுக்கு தெரிவித்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜாகர். இவர் பெர்லின் அருங்காட்சியகத்தில் பணியாற்றி வந்தார்.

1876ம் ஆண்டு ஏதோவொரு குறிப்பு மூலம் ஆதிச்சநல்லூர் குறித்து கேள்விப்பட்டவர் இங்கு நேரடியாக வந்து அப்பகுதியை ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்.

1910ல் பிரிட்டிஷ் அரசு இங்கு பல்வேறு சோதனைகளை நடத்தியபோது பழங்கால மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை 2002 முதல் 2005 வரை இங்கு நடத்திய தீவிர ஆய்வில் பல வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்தன.

இங்கு 600 சதுர மீட்டர் அளவிலான பகுதி மட்டும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 160க்கும் மேற்பட்ட பழங்கால மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin