
வல்லநாடு அருகே கலியாவூரில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் செக்காரக்குடி அணி முதல் பரிசை வென்றது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கலியாவூரில் கல்யாணி அம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் பரிசை ரூ.10ஆயிரத்தை செக்காரக்குடியைச் சேர்ந்த முருகேஸ்வரி மாட்டு வண்டி பெற்றது. பரிசினை கலியாவூர் பஞ்சாயத்து தலைவி பொன்கனி தமிழ்ச் செல்வி வழங்கினார்.
இரண்டாவது ரூ.7ஆயிரம் பரிசை சங்கரப்பேரியைச் சேர்ந்த மணி என்பவரது மாட்டு வண்டி பெற்றது. 3வது பரிசாக ரூ.5ஆயிரத்தை குறுக்குச்சாலையைச் சேர்ந்த நந்தகுமாரி மாட்டு வண்டி பெற்றது.
இதனை தொடர்ந்து சிறிய மாட்டுவண்டிகள் பிரிவில் செக்காரக்குடி, வரதராஜபுரம், தச்சநல்லூர், கரையிறுப்பு, திருநெல்வேலி டவுண் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கலந்துகொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கலியாவூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக