வியாழன், 25 ஜூன், 2009

தூத்துக்குடி, நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்


தூத்துக்குடி, நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 6வது ஊதியக் குழுவைக் கண்டித்து நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை துவங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.மாரியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் டெரன்ஸ், உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

6-வது ஊதியக்குழு அறிவிப்பு சத்துணவு ஊழியர்களுக்கு வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. சத்துணவு அமைப்பாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையிலும், சமையலருக்கு பதிவு எழுத்தர் நிலையிலும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையிலும் உள்ள ஊதிய விகித முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் உண்ணாவிரதத்தை நடத்துகிறோம் என்றார் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெகவீரபாண்டிய கட்டப்பொம்மன்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 200 சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர். இந்த தொடர் உண்ணாவிரதம் இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin