வியாழன், 28 மே, 2009

காயல்பட்டினத்தில் மனித நேய கருத்தரங்கு

காயல்பட்டினத்தில் மனித நேய கருத்தரங்கு நடைபெற்றது.
துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு ஷேகனா லெப்பை தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளைச் செயலர் டி.ஏ.எஸ். அபூபக்கர், அடைக்கலாபுரம் புனித சூசை அறக்கட்டளையைச் சேர்ந்த பிரான்சிஸ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஓய்வுபெற்ற மக்கள் தொடர்பு அலுவலர் இரா. கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை துணைத் தலைவர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துளிர் நிறுவனம், நிரஞ்சனம் மனநல மன்றம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கத்தினர் செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin