வியாழன், 28 மே, 2009

திருச்செந்தூரில் 30-ல் இதய நலன் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

திருச்செந்தூரில் இம் மாதம் 30-ம் தேதி பொதுமக்களுக்கான இதய நலன் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்செந்தூர் கிளை சார்பில் ஐஎம்ஏ திருமண மண்டபத்தில் அன்று மாலை 5 மணிக்கு கருத்தரங்கு நடைபெறுகிறது.

பிரபல இதய நல மருத்துவர் திருச்சியைச் சேர்ந்த சென்னியப்பன் பங்கேற்று மாரடைப்புக்கான காரணம், தடுக்கும் முறைகள் குறித்து பேசுவார். இதய நோய் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விளக்கமளிப்பார்.

பொதுமக்கள் பங்கேற்று இதய நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என திருச்செந்தூர் இந்திய மருத்துவ சங்கச் செயலர் டாக்டர் அ ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin