வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

மலேசியாவில் இந்திய தொழிலாளர்கள் வேலை இழப்பு

மலேசியாவில் சமையல் மற்றும் முடிதிருத்துவது போன்ற தொழில்களுக்கு உள்நாட்டவர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் அமர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதால்,இப்பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய மனித வள மேம்ம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம்,இனிமேல் மலேசியாவிலுள்ள இந்திய உணவு விடுதிகளில் உள்ளூர் சமையல்காரர்களே வேலையில் அமத்தப்படுவர் என்றும்,இப்பணிக்காக இந்திய சமையல்காரர்களை வரவழைக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.

சமையல் பணிகளுக்கான அரசு பயிற்சி திட்டத்தில் சேர மலேசியர்கள் ஆர்வம் காட்டுவதாகவும்,பயிற்சிக்கான கட்டணதை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அளிப்பதாகவும்,பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin