சனி, 15 ஆகஸ்ட், 2009

காயல்பட்டினம் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா

காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கல்லூரி தலைவர் எம்.எஸ்.எம்பாதுல் அஷ்ஹப் தலைமை வகித்தார்.

கோழிக்கோடு ஜாமிஆ மரீக்ஸ் பல்கலைகழக வேந்தர் பி.ஷைக் அபூபக்கர் அஹ்மத் முஸ்லியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

முதல்வர் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ரஹ்மான் மாணவர்களுக்கு ஆலிம் ஸனது பட்டம் வழங்கிப் பேசினார்.

கல்லூரி பேராசிரியர்கள் எஸ்.டி.அம்ஜத் அலீ, எஸ்.சய்யீத் அப்துர் ரஹ்மான், கே.எம்.காஜா முஹ்யித்தீன், ஏ.கே.முஹம்மத் அஸ்பா அஷ்ரஃபீ, என்ஏ.ஜி. ஷைக் இஸ்மாயில், ஏ.முஹம்மத் அஷ்ரப் அலி, ஏ.சய்யீத் முஹம்மத், ஏ.நாகூர் மீரான், என்எஸ்.எம். முஹம்மத் யாஸர் அராபத் மற்றும் கணினி ஆசிரியர் என்.ரபீக் அஹ்மத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

எம்.ஏ.எஸ். அபூதல்ஹா வரவேற்றார். வாவு வஜீஹா மகளிர் கல்லூரி செயலர் எம்.எம். மொகுதஸீம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin