வியாழன், 9 ஏப்ரல், 2009

மக்களவைத் தேர்தல்: இந்திய தேசிய லீக் தேர்தல் பணிக் குழு அமைப்பு

திருச்சி மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்காகத் தேர்தல் பணியாற்றுவதற்காக, இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்சியின் மாநில, மாநகர செயற்குழுக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஜி. கௌஹர்ஜான் தலைமை வகித்தார்.

மாவட்டத் துணைத் தலைவர் யூசுப் பாட்ஷா, மாவட்ட இணைச் செயலர்கள் நியாஸ், அபுபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்காகத் தேர்தல் பணியாற்றுவதற்காக புதிய தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் விவரம்:

மாநிலச் செயலர் ஜாகீர், மாவட்டத் தலைவர் ஜி. கௌஹர்ஜான், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஜெய்னுலாப்தீன், திருச்சி மாவட்டச் செயலர் ஏ. அன்வர் உசேன், திருச்சி மாவட்டத் துணைத் தலைவர் ஆர். முகமது யூசுப் பாட்ஷா. முன்னதாக, மாவட்டச் செயலர் ஏ. அன்வர் உசேன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் சலீம் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin