புதன், 18 மார்ச், 2009

தங்கம் வாங்க தபால் நிலையம் வாங்க !

தங்கம் வாங்க தபால் நிலையம் வாங்க !தபால் நிலையங்களில் தங்க நாணயம் விற்பனை மும்முரம்!

தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் முதலீட்டாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில், கடந்த 4 மாதங்களில் 24 கிலோ தங்க நாணயம் விற்பனை செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தபால் நிலையங்களில் தங்க நாணயம் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தங்க நாணய விற்பனையை தொடங்கியுள்ளது.

24 காரட் சுத்த தங்கத்தில் 1/2 கிராம், ஒரு கிராம், 5 கிராம் மற்றும் 8 கிராம் எடைகளில் தங்க நாணயங்களாக காற்று புகாத அளவுக்கு சீலிட்டு தங்க நாணயங்கள் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வெளியிட்டு உள்ளனர்.

தங்க நாணய விற்பனை, கடந்த ஆண்டு அக்டோபர் மாத மத்தியில் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட தலைமை மற்றும் துணை தபால்நிலையங்கள் என மொத்தம் 20 தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைக்கருத்தில் கொண்டு கடந்த மாதம் மேலும் 9 தபால் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இப்போது, சென்னையில் கிரீம்ஸ் சாலை, பூங்கா நகர், அயனாவரம், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருவொற்றிïர், குரோம்பேட்டை, பாடி, பல்லாவரம், ஆழ்வார்திருநகர், நங்கநல்லூர் தபால் நிலையங்களில் தங்க நாணயம் விற்பனை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல், செங்கல்பட்டு, பெரிய காஞ்சிபுரம், அரக்கோணம், சத்துவாச்சேரி, ஓசூர், திருப்பூர், சிவகாசி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் என 22 தபால் நிலையங்களுக்கும் தங்க நாணய விற்பனை திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் கடந்த 4 மாதங்களில் தபால் நிலையங்கள் மூலம், 24 கிலோ 862 கிராம் தங்க நாணயம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு 3 கோடியே 67 லட்சத்து 99 ஆயிரத்து 112 ரூபாய் ஆகும் என்றும், ஒரு கிராம் மற்றும் 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை மக்கள் விரும்பி வாங்குவதாகவும், சென்னை தியாகராயநகர் மற்றும் அண்ணாநகர் தலைமை தபால் நிலையங்களில் அதிக அளவுக்கு தங்க நாணயம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தபால் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin