ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரபரணி குறுகிய ஆற்றுப் பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதிர் எதிரே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஒரு பஸ் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் பாலத்தின் மறுபுறம் காத்திருக்க வேண்டும்.
இப்போதைய போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையில் பாலம் இல்லாததால் புதிய ஆற்றுப்பாலம் கட்ட 2008 செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
2010 ஜூலை மாதமே முடிக்கப்படவேண்டிய பாலப்பணிகள் பல்வேறு காரணங்களால் முடிக்கப்படவில்லை.இதனால் ஸ்ரீவைகுண்டம் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் தினமும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை பகல் 12.30 மணியளவில் தனியார் பேருந்தும், அரசுப் பேருந்தும் பாலத்தின் மையப் பகுதியில் எதிர் எதிரே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல வாகனங்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து நின்றன .
அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது. தொடர் கதையாகவே இருந்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பாலம் கட்டும் பணியை விரைவுபடுத்தி அப்பாலத்தில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல்: தினமணி
ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
செவ்வாய், 31 மே, 2011
ஸ்ரீவை, அணையில் தேங்கி நிற்கும் அமலைச்செடிகள்

புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு ஸ்ரீவைகுண்டம் அணையில் தேங்கியுள்ள அமலைச் செடிகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி ஆறு கிட்டத்தட்ட பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை 75 கிலோ மீட்டர் தூரம் தினசரி குடிதண்ணீர், விவசாயம், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுத்து வருகிறது.
கோடைகாலமாக இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் அணையில் 40 அடிக்கு கீழ் தண்ணீர் இறங்கி கொண்டு வருகிறது. இதனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாபநாசத்திலிருந்து புன்னக்காயல் வரை அமலைச் செடிகள், வேலிக்காத்தான் செடிகள் ஆறுகள், குளங்கள், மடைகள், சிற்றாறுகள் என அனைத்திலும் தண்ணீர் தெரியாதவாறு ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது.

ஒரு அமலைச்செடி நாள் ஒன்றுக்கு அரைலிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதாக தெரிகிறது. மேலும் அமலையின் வேர்கள் அழுகி தண்ணீரை அசுத்தமும் செய்து வருகிறது. அடர்த்தியாக அமலைகள் இருப்பதால் பாம்புகள், அட்டைகள், கண்ணுக்கு தெரியாத புழுக்கள் எல்லாம் தண்ணீரை அசுத்தப்படுத்தி வருகிறது. பெருநகரங்களில் உள்ள கழிவுகள் எல்லாம் சேர்ந்து தாமிரபரணி ஆற்றை பாழ்படுத்தி வருகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் பயன்படுத்தி வரும் குடிதண்ணீர் பாதுகாக்கப்படாத ஆற்றிலிருந்து நேரடியாக மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்நாள் பிடித்த குடிதண்ணீர் குடத்தில் மறுநாள் பார்த்தால் குடத்தின் உள்ளே பசை போல் கழிவுகள் ஒட்டுகிறது. மறுநாள் குடங்களை நன்றாக கழுவிய பின்னர் தான் தண்ணீர் பிடிக்க முடிகிறது. சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்களுக்கு தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள தண்ணீரை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி, அமலைச் செடியை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுப்பணித்துறையிடம் கடந்தாண்டு டிசம்பரில் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமலைச் செடிகளை அப்புறப்படுத்த திட்டமில்லை என்றும், அணையை ஆழப்படுத்த வனத்துறையின் அனுமதி வேண்டும் என்றும் தெரிவித்துவிட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அணையை ஆழப்படுத்த அரசுத்துறையான வனத்துறை பொதுப்பணித்துறைக்கு எப்போது அனுமதி அளிக்கும் என்பது நீண்ட நாள் கேள்வியாக உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறையும், வனத்துறையும் இணைந்து அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து தூர்வாருவதற்கு வழிவகை செய்ய தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியை பெற்றுள்ள சண்முகநாதன் இதனை உடனே நிறைவேற்றுவார் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய சிபிஎம்., செயலாளர் கந்தசாமி கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றினையும் அனுப்பி உள்ளார்.
தகவல் : தினமலர்
வியாழன், 5 மே, 2011
ஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சி என்ற பெயரில் வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.
Osama bin Laden Killed (LIVE VIDEO) என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ்
இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு
எச்சரிக்கை ரிப்போர்ட்.
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று
அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க
இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று
தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை
வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம்.
உங்களுக்கு இமெயில் அல்லது பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற
சோசியல் தளங்களில் இருந்து படம் 1-ல் மேலே காட்டியபடி ஒரு
வீடியோ காட்டப்படும் அதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படும்
நேரடி வீடியோ காட்சியை யூடியுப் ஒளிபரப்ப அனுமதி கொடுக்காத
காரணத்தால் இங்கு கொடுக்கப்படிருக்கும் முகவரியை சொடுக்கி
அந்த வீடியோவை பாருங்கள் என்று இருக்கும் உடன் கொடுக்கப்
பட்டிருக்கும் இணையதள முகவரியை எக்காரணம் கொண்டும்
சொடுக்க வேண்டாம். நாம் எதையும் தரவிரக்காமல் எப்படி நம்
கணினியை வைரஸ் தாக்கும் என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக
யோசிப்பதற்குள் உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்.
அதாவது நாம் உலாவியில் பார்க்கும் இணையதளங்கள் கணினியில்
தற்காலிகமாக (Temporary) ஆக சேமிக்கப்பட்டு தான் நமக்கு காட்டப்படும்
இந்த வைரஸ் தன் பணியை உலாவி Temporary ஆக சேமிக்கப்பட்டுள்ள
இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கூகிஸ் மூலம் நண்பர்களின்
இமெயில் முகவரியை எடுத்து அவர்களுக்கும் அனுப்பிவிடுகிறது.
முன்னனி ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் கூட விழிபிதுங்கி இருக்கிறது.
இதுபோல் ஒசாமா பெயரில் வரும் எந்த இணைப்பையும் (Link)
சொடுக்காமல் இருப்பது தான் பிரச்சினை வராமல் தடுக்க ஒரே வழி.
உங்கள் நண்பர்களுக்கும் இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள்.
இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு
எச்சரிக்கை ரிப்போர்ட்.
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று
அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க
இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று
தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை
வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம்.

படம் 1
சோசியல் தளங்களில் இருந்து படம் 1-ல் மேலே காட்டியபடி ஒரு
வீடியோ காட்டப்படும் அதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படும்
நேரடி வீடியோ காட்சியை யூடியுப் ஒளிபரப்ப அனுமதி கொடுக்காத
காரணத்தால் இங்கு கொடுக்கப்படிருக்கும் முகவரியை சொடுக்கி
அந்த வீடியோவை பாருங்கள் என்று இருக்கும் உடன் கொடுக்கப்
பட்டிருக்கும் இணையதள முகவரியை எக்காரணம் கொண்டும்
சொடுக்க வேண்டாம். நாம் எதையும் தரவிரக்காமல் எப்படி நம்
கணினியை வைரஸ் தாக்கும் என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக
யோசிப்பதற்குள் உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்.
அதாவது நாம் உலாவியில் பார்க்கும் இணையதளங்கள் கணினியில்
தற்காலிகமாக (Temporary) ஆக சேமிக்கப்பட்டு தான் நமக்கு காட்டப்படும்
இந்த வைரஸ் தன் பணியை உலாவி Temporary ஆக சேமிக்கப்பட்டுள்ள
இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கூகிஸ் மூலம் நண்பர்களின்
இமெயில் முகவரியை எடுத்து அவர்களுக்கும் அனுப்பிவிடுகிறது.
முன்னனி ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் கூட விழிபிதுங்கி இருக்கிறது.
இதுபோல் ஒசாமா பெயரில் வரும் எந்த இணைப்பையும் (Link)
சொடுக்காமல் இருப்பது தான் பிரச்சினை வராமல் தடுக்க ஒரே வழி.
உங்கள் நண்பர்களுக்கும் இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள்.
தகவல் உதவி : விண்மணி
திங்கள், 4 ஏப்ரல், 2011
கிரிக்கெட் உலக சாம்பியனாக வரலாறு படைத்ததுடன் புதிய உலக சாதனையும் படைத்துள்ளது நமது இந்தியா

10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது நமது இந்தியா.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள் கழித்து இப்போது தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்த முறை கோப்பையை வென்றதன் மூலம் கோப்பையை நடத்திய நாடுகள் அதன் சொந்த மண்ணில் இறுதி ஆட்டத்தை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி புதிய சாதனைப் படைத்துள்ளது

இந்திய அணியின் வெற்றி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், உரக்கக் குரல் எழுப்பியும் கொண்டாடினர். 1983-ல் இந்தியா கோப்பையை வென்றபோது ஏற்பட்ட அதே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் இந்தியா முழுவதும் காண முடிந்தது.
சனி, 2 ஏப்ரல், 2011
கிரிக்கெட் உலக கோப்பை 2011 நமக்கே !
இந்த 2011 கிரிக்கெட் உலக கோப்பை நமக்கு தான் என்று நினைக்க தோன்றுகிறது. ஏன் என்றால் கடந்த 1983 ஆம் வருட காலண்டரும் 2011 ஆம் வருட காலண்டரும் ஒரே மாதிரி உள்ளத்தால் இது கூட ஒரு காரணம் என்று சொல்லலாம்.



ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் நாட்டம் என்ன? என்பதை யாரும் அறியாத ஒன்று என்பது தெளிவான விஷயம் ஆகும்.



ஆனால் எல்லாம் வல்ல இறைவனின் நாட்டம் என்ன? என்பதை யாரும் அறியாத ஒன்று என்பது தெளிவான விஷயம் ஆகும்.
செவ்வாய், 29 மார்ச், 2011
ஸ்ரீவைகுண்டத்தில் "அம்மா" என்ற முத்திரையிடப்பட்ட ரூ.100 நேட்டால் பரபரப்பு
ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்ற முத்திரையிடப்பட்ட ரூ.100 வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகளால் தேர்தல் வேலைகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடக்கிறது. மேலும் வர்த்தக பிரமுகர்கள் பணம் கொண்டு செல்வது கூட பறக்கும் படையினரால் தடுக்கப்பட்டு விட்டது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் வாகன சோதனை கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்று ரப்பர் ஸ்டாம்பி்ல் முத்திரை குத்தப்பட்ட ரூ.100 நோட்டுகள் பல்வேறு தரப்பினரிடம் புழக்கத்தில் உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை அதிகமுவினரே இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக அம்மா என்ற அடையாளத்தை முத்திரையிட்டு வினியோத்தார்களா, அல்லது போலீசையும், தேர்தல் ஆணையத்தையும் திசை திருப்ப யாரேனும் செய்தார்களா என்பது தெரியவில்லை.
இந்த நோட்டை வினியோகித்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகளால் தேர்தல் வேலைகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடக்கிறது. மேலும் வர்த்தக பிரமுகர்கள் பணம் கொண்டு செல்வது கூட பறக்கும் படையினரால் தடுக்கப்பட்டு விட்டது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் வாகன சோதனை கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்று ரப்பர் ஸ்டாம்பி்ல் முத்திரை குத்தப்பட்ட ரூ.100 நோட்டுகள் பல்வேறு தரப்பினரிடம் புழக்கத்தில் உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை அதிகமுவினரே இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக அம்மா என்ற அடையாளத்தை முத்திரையிட்டு வினியோத்தார்களா, அல்லது போலீசையும், தேர்தல் ஆணையத்தையும் திசை திருப்ப யாரேனும் செய்தார்களா என்பது தெரியவில்லை.
இந்த நோட்டை வினியோகித்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேபிள்கள்:
தமிழக சட்டமன்ற தேர்தல் 2011,
ஸ்ரீவை செய்தி,
ஸ்ரீவைகுண்டம்
திங்கள், 28 மார்ச், 2011
வஃபாத்து செய்தி
வஃபாத்து செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த ஜனாப் மீரான் முஹைதீன் (பாபு சார் )இன்று காலை காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
நமது ஊரில் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சேர்ந்த ஜனாப் மீரான் முஹைதீன் (பாபு சார் )இன்று காலை காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்வோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)