புதன், 31 ஆகஸ்ட், 2011

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் எங்களின் உள்ளங்கனித்த ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல இறைவன் நாம் அனைவரும் பிடித்த நோன்புகளையும், கேட்ட துவாகளையும், ஏற்றுக்கொண்டு நல்லருள் புரிவனாக ஆமீன்.

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

புதன், 24 ஆகஸ்ட், 2011

ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

இந்த அணைப் பகுதியிலிருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

இப்போது, ரூ.28 கோடி திட்ட மதிப்பீட்டில் ராட்சத குழாய்கள் பதித்து, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் தாமிரபரணி ஆற்றுக்குள் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறையின்போது விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தது போகத்தான் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென விதிமுறை உள்ளது. ஆனால், அதையும் மீறி தூத்துக்குடியில் உள்ள 8 தொழிற்சாலைகளுக்கு அளவுக்கு அதிகமாக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையம், வடகால் பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அணைக்கட்டில் உள்ள அமலைச் செடிகளை அகற்றவும், ஆற்றைத் தூர்வாரவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் வசந்தா, ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கங்காதரன், பிரிவு அலுவலர் வினோத்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஸ்ரீவையில் கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.

ஸ்ரீவைகுண்டத்தில் கட்டிமுடிக்கப்படாத பாலத்திலிருந்து தவறி விழுந்து பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.

ஸ்ரீவைகுண்டம் பழைய பாலத்தை அகலப்படுத்தும் பணி 2009-ல் தொடங்கியது. 2010-ம் ஆண்டு ஜூலைக்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டது.ஆனால் இன்னும் அப்பணி முடிவடையவில்லை.

ஸ்ரீவைகுண்டம் வரும் ஆழ்வார்தோப்பு இணைப்புச் சாலையில் பாலத்தின் உயரம் இருபுறங்களிலும் சுமார் 20 அடி உள்ளது. ஆனால் கைப்பிடிச் சுவர் கட்டப்படவில்லை.

பாதுகாப்பு இல்லாத இப்பகுதியில்தான் பொதுமக்கள் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், சனிக்கிழமை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் செ. மாணிக்ககுமார் தனது நண்பர்களுடன் புதிய பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தாராம்.அப்போது தவறி கீழே விழுந்ததில் அவர் இறந்தார்.

சம்பவ இடத்தை வட்டாட்சியர் வசந்தா பார்வையிட்டார்.இது குறித்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு

சமூக சேவகர் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு நடத்த அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கந்தசிவசுப்பு, துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கூறி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நாளை (24ம் தேதி) ஒரு நாள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அனைத்து கடைகளையும் அடைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பசுப்பொன் ரத்ததானக்கழக நிறுவனர் ராஜா, வியாபாரிகள் சங்க செயலாளர் ஐசக், இணை செயலாளர் முத்துமாலை, பொருளாளர் லெட்சுமணன் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

LinkWithin

Blog Widget by LinkWithin