புதன், 2 நவம்பர், 2011

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவராக பதவி ஏற்றிருக்கும் பி.அருணாசலம் தலைமையில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடங்கியது.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் பி.அருணாசலம் கூறியதாவது:

அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளால் தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது.எனவே இந்த மழைக்காலத்தில் அமலைச் செடிகளை பொதுமக்கள் துணையுடன் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்

செய்தி : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin