வியாழன், 13 அக்டோபர், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளக்கால மீட்ப்பு பணி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை


ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் வெள்ளக்கால மீட்ப்பு பணி குறித்து தாமிரபரணி ஆற்றில் ஒத்திகை நடந்தது.

தீயணைப்பு -மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னேச்சரிக்கை காரனமாக ஒத்திகை பயிற்ச்சி நடந்தது. பயிற்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் மனோகரன் தலைமைதாங்கினார்.

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனப்படித் துறையில் நடந்த மீட்ப்பு பணி ஒத்திகையில் உதவி மாவட்ட அலுவளர் லோகிதாஸ் தூத்துக்குடி நிலைய அலுவளர் ராஜி மற்று தூத்துக்குடி நிலைய கமோண்டோ வீரர்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் நிலைய பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ரப்பர்படகு மற்றும் விசை படகு, மண்ணெண்ணை பேரல் படகு தயார் செய்து அதில் பொது மக்களை வெள்ளத்தில் இருந்து மீட்ப்பது எவ்வாறு என்பதை தத்துருவமாக செய்து காண்பித்தனர்.

ஒத்திகையில் குமரகுருபரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி : தூத்துக்குடி வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin