வெள்ளி, 16 செப்டம்பர், 2011

59 ஆயிரம் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க திட்டம்; கலெக்டர் ஆஷிஷ்குமார் தகவல்


தூத்துக்குடி, செப்.13-

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஆஷிஷ்குமார் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் விவசாயிகளுக்கு ஆடு&மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதற்கான பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்திற்கு 1,200 பேரும், இலவச லேப்&டாப் வழங்கும் திட்டத்திற்கு 100 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் இந்த ஆண்டு 59 ஆயிரம் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கவும், 13 ஆயிரத்து 611 மாணவர்களுக்கு லேப்&டாப் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வடகாலில் இருந்து 600 கனஅடி தண்ணீரும், தென்காலில் இருந்து 100-150 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 2 மோட்டார்கள் மூலம் 30 முதல் 35 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மீனவர் பிரச்சினைகள் ஓர் இரு நாளில் தீர்க்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.

தொடர்ந்து இந்திராகாந்தி தேசிய விதவை உதவிதொகை ஆயிரம் வீதம் 18 பேருக்கும், முதியோர் உதவி தொகை 40 பேருக்கும், முதல்&அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 ஆயிரம் நிதிஉதவியை என்ஜினீயர் பயிலும் 3 மாணவ-மாணவிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவியாக தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் 4 பேருக்கும், திருமண உதவியாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் 2 பேருக்கும், சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் சாதனை படைத்த 12 மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin