வியாழன், 21 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் கே ஜி எஸ் கல்லூரியில் விழிப்புணர்வு வார விழா

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் கல்லூரியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

காந்திய சிந்தனை பண்பாட்டு மையம் சார்பில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய விழாவில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகம் வகுப்பறைகள், அலுவலகம், நூலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களையும், குப்பைகளையும் அகற்றி தூய்மைப்படுத்தினர்.

இறுதி நாள் நிகழ்ச்சிக்கு,கல்லூரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்து பேசினார். விலங்கியல் துறைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவர் ஜான் டீ பிரிட்டோ பேசினார். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காந்தியசிந்தனை பண்பாட்டு மைய இயக்குநர் போஸ் வரவேற்றார். பொருளியல் துறை பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.

நன்றி : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin