புதன், 20 ஜூலை, 2011

ஸ்ரீவைகுண்டம் குருஸ் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோவில் திருத்தல திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீவை குண்டம் தாமிரபரணி நதிக் கரையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டப்பட்டு இதன் திருத்தல திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ம்தேதி முதல் 25ம்தேதி வரை நடக்கிறது.

குருஸ் கோவில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கொடிகள் அர்ச்சிக்கப் பட்டு ஸ்ரீவைகுண்டம் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவிலை சுற்றி வந்து சாத்தான்குளம் மறை மாவட்ட முதன்மை குரு எட்வர்ட் தலைமையில் கொடியேற்றப்பட்டது.

இரவு கொம்புத்துறை பங்கு தந்தை விக்டர்லோயோ தலைமை யில் மறையுரையும், நற் கருணை ஆராதனையும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.

வரும் 24ம்தேதி 9ம்திருவிழா அன்று தூத்துக்குடி இளை யோர் பணியகம் உதவி இயக்குனர் பங்குத்தந்தை கிராசியுஸ் மைக்கில், தலைமையில் காலை 6.30 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மாதா, புனித சந்தியாகப்பர், மிக்கேல்தூதர் ஆகியோர் சப்பரபவனி நடக்கிறது.

பங்கு தந்தை லூசன் தலைமையில் 12 மணிக்கு ஜெபமாலை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு செல்வராஜ் தலைமையில் நற்கருணை பவனியும், தூத்துக்குடி புனித அந்தோணியார் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.

வரும் 25ம்தேதி 10ம் திருவிழாவையொட்டி காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.15 மணிக்கு இரண்டாவது திருப்பலியும், காலை 6 மணிக்கு மூன்றாம் திருப்பலியும், காலை 7 மணிக்கு நான்காம் கூட்டுத் திருப்பலியும், பகல் 10 மணிக்கு தேர்பவனியும், பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி நடக் கிறது. வரும் 26ம்தேதி காலை 6மணிக்கு திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது.

திருவிழா நாட்களில் பங்கு தந்தைகள் ஜாண்பென்சன், மகிழன், ரெமிஜியுஸ், ஆரோக்கியராஜ், ஆரோக்கிய தாஸ், கி÷ஷார், சேவியர் அந்தோணி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ஜெயகர், அருள் சகோதரிகள், பங்குப்பேரவை, ஊர்நலக் கமிட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.

செய்தி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin