திங்கள், 27 ஜூன், 2011

ஸ்ரீவை, பஸ் ஸ்டாண்டு கடைகள் ஏலம் விடுவதை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்துக்குள் கட்டப்பட்டுள்ள கடைகளை வாடகைக்கு ஏலம் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து செயல்பாடுகளை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்துக்குள் 9 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 8 புதிய கடைகள் கட்டப்பட்டன. இந்த கடைகளை நகர பஞ்சாயத்து நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பு வாடகைக்கு ஏலம் விட்டது.

இந்த ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பூமிநாதன் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவது தொடர்பான செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே மனு விசாரணைக்கு வந்த அன்றே ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு தலைமையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், மொத்தம் உள்ள 8 கடைகளில் கடை எண் 1-ஐ தவிர மற்ற 7 கடைகளையும் அதிக வாடகை தொகைக்கு டெண்டர் வைத்தவர்களுக்கு வாடகைக்கு விட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர், பஞ்சாயத்துக்களின் இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பூமிநாதன் மனு கொடுத்தார். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். எனவே கவுன்சிலர்கள் கூட்டத்தில் கடை ஏலம் குறித்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தகவல் : தூத்துக்குடி வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin