திங்கள், 27 ஜூன், 2011

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்ரீவை, வட்டார மாநாடு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்ரீவைகுண்டம் வட்டார மாநாடு தி.உலகம்மாள் தலைமையில் கடத்த வாரம் நடைபெற்றது.

மாவட்டச் செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் மல்லிகா சிறப்புரையாற்றினார். வட்டாரச் செயலராக ரா.குணேஷ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும். பேட்மாநகரம் அருகேயுள்ள தனியார் கிரஷர் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

ஸ்ரீவைகுண்டத்தில் ஆற்றுத் தண்ணீர் மாசுபடுவதால் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும். தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதில் வேலம்மாள், நாச்சியார், கனி, பேச்சியம்மாள், மாரியம்மாள், ராஜலட்சுமி, லட்சுமி, விஜயா, செல்லம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin