திங்கள், 27 ஜூன், 2011

ஸ்ரீவை , அணைக்கட்டில் அமலைச்செடிகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் என ஸ்ரீவை.சிவாஜி நற்பணி மன்றம் அறிவிப்பு


ஸ்ரீவை அணைக்கட்டில் அமலைச்செடிகளை அகற்றாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவைகுண்டம் சிவாஜி நற்பணி மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது;

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகள் ஆற்று நீரில் மிதந்து வந்து தண்ணீரை வீணாக்குகிறது. மேலும் ஆற்றங்கரையில் நீராடும் பொதுமக்களுக்கு அரிப்பு ஏற்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

மேலும் தண்ணீரை உறிஞ்சி வீணாக்குவது மட்டுமல்லாமல் அசுத்தமாக்கி தண்ணீரின் தன்மையும் கெட்டுவிடுகிறது. இதுகுறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் பொதுப்பணித்துறை நிர்வாகம் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு குடிதண்ணீர் பாதுகாக்கப்படாத நிலையில் ஆற்றிலிருந்து நேரடியாக மக்களுக்கு குழாய்கள் உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவையில் சுகாதாரமான தண்ணீர் கிடைக்காததாலும்.ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளாலும் தோல் நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

கலங்கலான சகதி கலந்த சேறுடன் சில வேளைகளில் தண்ணீர், குடிநீராக வழங்கப்படும் நிலையும் இருப்பதால் மக்களுக்கு தோல் நோயுடன் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் அமைப்புகள் மற்றும் பொது நலச்சங்கங்கள் குரல் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் இன்று வரை எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை.

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது சம்பந்தமாக பொதுப்பணித்துறையும், வனத்துறையும் இணைந்து ஆய்வு செய்ய தற்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஸ்ரீவை சார்த்த ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ, திரு. சண்முகநாதன் இதனை நிறைவேற்றுவார் என்று ஸ்ரீவை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தகவல் : செய்திதாள்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin